என்னதான் உயிரைக்கொடுத்து நடித்து தங்களது நடிப்பு திறமையை நடிகர்கள் வெளிப்படுத்தினாலும், அழும் காட்சிகளில் அவர்களது கண்களில் இருந்து கண்ணீரை வரவைப்பது கிளிசரின் என்ற வேதியியல் பொருள்தான். இந்த கிளிசரின் இல்லாமலும் சிலர் நடிகர்கள் அழுகிறார்கள். அது வேறு சில பிரச்சனைக்காக என்றாலும், தான் நடிக்கும் 3 படத்தின் காட்சி ஒன்றில் நடிக்கும்போது கிளிசரின் இல்லாமலேயே தனுஷ் அழுதாராம்.
தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கும் 3 படத்தின் இரண்டாவது கட்டப் படப்ப்டிப்பு சென்னை திருவல்லிக்கேணி மற்றும் ஆர்.ஏ.புரம் போன்ற பகுதிகளில் நடைபெற்று வருகிறது. உருக்கமான காட்சி ஒன்றை படம் பிடிக்கும்போது தனுஷ் கிளிசரின் இல்லாமல் இரண்டு முறை அழுதுவிட்டாராம்.
இதுபற்றி கூறியிருக்கும் தனுஷ், "சினிமா எவ்வளவு ஆத்மார்த்தமான துறை என்று இப்போது உணர்ந்து கொண்டேன். இந்த காட்சியில் என்னை அறியாமலேயே என்னை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறேன்."என்றார்.

No comments:
Post a Comment