இந்தியாவில் 36 கோடிப்பேர் இன்னும் ஏழைகளாக உள்ளனர் என்று திட்டக்கமிஷன் தெரிவித்துள்ளது. திட்டக்கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்தியாவில் வறுமை நிலை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. 1993-94 முதல் 2004-2005 வரையிலான காலக்கட்டத்தில் ஏழ்மை நிலை ஆண்டுக்கு 0.74 சதவிகிதம் என்ற அளவில் குறைந்து வருகிறது. அதன் பிறகு இந்த விகிதம் 2 மடங்காகி ஆண்டுக்கு 1.5 என்ற சதவிகிதம் அடிப்படையில் வறுமை குறைந்து வருகிறது. வறுமை முழுமையாக நீக்கிவிட்டோம் அல்லது ஒழித்துவிட்டோம் என்று நாங்கள் சொல்லவில்லை.
2004-ல் 37.2 சதவிகிதமாக இருந்த வறுமை அளவை 2009-2010-ம் ஆண்டில் 30 சதவிகிதமாக குறைத்து விட்டோம் என்றே நாங்கள் சொல்கிறோம். இந்த விபரம் சுரேஷ் தெண்டுல்கர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 36 கோடிப் பேர் இன்னும் மிகவும் ஏழைகளாக உள்ளனர். வறுமை கோடு பற்றிய அளவீட்டை, மீடியாக்கள் சில திரித்து வெளியிட்டன.
அதனால்தான் சர்ச்சைகள் கிளம்பின. நமது பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. அனைத்து துறைகளிலும் வளர்ச்சி சார்ந்த யுக்திகளை கையாண்டு வருகிறோம். விவசாயத்தில், கடந்த ஆண்டுகளில் 2 சதவிகித வளர்ச்சியே காணப்பட்டது. கடந்த ஆண்டு 3.5 சதவிகிதமாக இது உயர்ந்துள்ளது. தேசிய கிராம வேலை உறுதியளிப்பு திட்டம் கூலியையும், வேளாண்மை உற்பத்தியையும் அதிகரித்து இருக்கிறது. வறுமைக்கோடு எல்லை நிர்ணயிக்கப்பட்டு இருப்பது, பல்வேறு அரசு திட்டங்களின் மூலம் பயன்பெற்று வரும் பயனாளிகளை குறைப்பதற்காக அல்ல.
அவர்கள் இன்னும் நிறைய பலன்களை பெற முடியும். மக்களின் வாழ்க்கை தரத்தை மதிப்பிட ஒரு அளவு கோல் தேவைப்படுகிறது. அந்த வகையில்தான் வறுமை கோடு வரம்புக்குள் வருபவர்களின் வருமான அளவு நிர்ணயிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment