தென்னிந்திய திரையுலகில் ஒரு படம் வரவேற்பை பெற்றால், அப்படத்தின் இந்தி உரிமைக்கு பெரும் போட்டி நிலவுவது வாடிக்கையாகிவிட்டது.
தமிழில் பெரும் வரவேற்பை பெற்ற 'கஜினி' படத்தினை இந்தியில் அமீர்கானை வைத்து இயக்கினார் ஏ.ஆர்.முருகதாஸ். 'கஜினி' படம் இந்தியிலும் கோடிகளை குவித்து, முருகதாஸுக்கு மார்கெட்டை ஏற்படுத்திக் கொடுத்தது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இந்தியின் முன்னணி நடிகர்கள் பலரும் ஆர்வமாக முன்வந்தார்கள். ஆனால், வந்த வாய்ப்புகளை தவிர்த்து, தமிழில் 'ஏழாம் அறிவு' படத்தினை இயக்கினார் அவர்.
தற்போது விஜய் நடிக்கும் 'துப்பாக்கி' படத்தினை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் வேடத்தில் நடித்து வருகிறார் விஜய்.
'துப்பாக்கி' கதையினை விஜய்க்கு முன்பே அக்ஷய்குமாரிடம் கூறியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இதனால் 'துப்பாக்கி' படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்து விட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் அக்ஷய்குமார்.
மும்பையில் நடப்பது போன்று கதை அமைந்து இருப்பதாலும், இந்தியில் எவ்வித மாற்றமும் தேவையில்லை என்பதாலும் 'துப்பாக்கி' படத்தின் இந்தி ரீமேக் வருவது உறுதியாகி இருக்கிறது.
No comments:
Post a Comment