இலங்கை தமிழர்களின் லட்சியமான தனித்தமிழீழம் என்றாவது ஒருநாள் நிச்சயம் உருவாகும் என தி.மு.க தலைவர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழர்களின் எதிர்காலம் பற்றி இன்று பேசிய கருணாநிதி, ’தமிழீழம் என்பது வரலாற்று ரீதியாக தமிழருக்கு வழங்கப்பட வேண்டிய உரிமை. இலங்கை மண்ணில் தமிழர்கள் சிந்திய ரத்தமும், உயிர் பலிகளும் வீண் போகாது. என்றாவது ஒருநாள் நிச்சயம் தமிழீழம் உருவாகும். இலங்கை தமிழர் விவகாரத்தில் ஐ.நா தலையிட்டு, பிற நாடுகளைப் போல் பொது வாக்கெடுப்பு நடத்தி தமிழீழத்தை உருவாக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.
மேலும் ஐ.நா.வின் தலையீட்டால் கொசாவோ, மாண்டி நீக்ரோ, தெற்கு சூடான், கிழக்கு தைமூர் போன்ற நாடுகள் உருவானதையும் கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.
சமீபத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வுப் பணிகளை பார்வையிட இந்தியாவில் இருந்து சுஷ்மா சுவராஜ் தலைமையில் 14 பேர் கொண்ட அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவை மத்திய அரசு இலங்கைக்கு அனுப்ப முடிவு செய்தது. இந்த எம்.பி.க்கள் குழுவில் இருந்து அ.தி.மு.க. விலகிக்கொள்வதாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதைத் தொடர்ந்து கடைசி நேரத்தில் தி.மு.க.வும் இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழுவில் இருந்து விலகியது.
இதுபற்றி பேசிய கருணாநிதி, ‘எம்.பி.க்கள் குழு பயணத்தால் எந்தப் பயனும் ஏற்படவில்லை என்பதற்கு பழைய கால உதாரணங்கள் இருக்கின்றன. எனவே அந்தப் பயணத்தை தி.மு.க சார்பாக யாரும் மேற்கொள்ளவில்லை’ என்றார்.
இந்நிலையில் கருணாநிதி தற்போது தமிழீழம் நிச்சயம் உருவாகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தக் கூற்றை இனப்படுகொலை நடந்த போது,விடுதலைப் போர் நடந்த போது சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.அப்போது பணத்தை எண்ணி கொண்டிருந்து,பதவியில் ஒட்டிக் கொண்டிருந்து மானாட மயிலாட பார்த்துக் கொண்டிருந்து விட்டு இலட்சக்கணக்கான மக்களை கொல்ல துணை போய் விட்டு கூறுவது பொருத்தமற்றதாகும்.
ReplyDeleteகுஸ்பு-நாச்சியப்பன் குழு தேடப்பட்ட குற்றவாளி டக்ளசுக்கு இலங்கையின் எம்.ஜி.ஆர் என பட்டம் சூட்டி சிங்களத்தின் செயல்களைப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் தாத்தாவோ உள்கட்சி,சகோதர பூசலை மறைக்க நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறார்.சங்கு எப்போது ஊதப்படும்?