ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ளது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய ஜூலை மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய குடியரசுத் தலைவர்களில் அதிக முறை வெளிநாடு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டவர் என்ற பெருமையைப் பெற்றுள்ள பிரதீபா பாட்டீல், தனது பதவிக் காலம் முடிவடைவதற்குள், கடைசிப் பயணமாக ஜுலை மாதத்தில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு 12 நாள் சுற்றுலாப் பயணம் செல்ல உள்ளார்.
இதுவரை 12 முறை வெளிநாடுப் பயணம் மேற்கொண்டு 22 நாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ள இவரது சுற்றுலாவிற்காக, மத்திய அரசு ரூ.205 கோடி செலவிட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இவற்றில் பெரும்பாலானா பயணங்களில், அதிகாரிகளை விட பிரதீபாவின் குடும்ப உறுப்பினர்களே அதிகமாக அவருடன் சென்றுள்ளனர்.
No comments:
Post a Comment