நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தோனேஷியாவை முதல் சுனாமி அலை தாக்கியது.
இந்தோனேஷியாவில் பாண்டா அச்சா அருகே ஏற்பட்ட நில நடுக்கத்தால் இந்தோனேஷியாவின் கடற்கரை பகுதியில் முதல் சுனாமி அலை தாக்கியது. குறிப்பாக சபாங் மற்றும் மெலாபோ ஆகிய இடங்களில் சிறிய அளவிலான சுனாமி அலைகள் தாக்கியதாக த்கவல்கள் தெரிவிக்கின்றன.
சுனாமி அலைகள் அரை மீட்டரில் இருந்து 1 மீட்டர் உயரத்திற்கு எழும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் ஏற்பட்ட பாதிப்பு விவரம் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றபோதிலும், இந்த சுனாமி அலை வலுவாக இல்லாததால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரிக்டர் அளவு கோலில் 8.6 ஆக பதிவான முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த சிலமணி நேரங்களிலேயே, இந்தோனேஷியாவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 8.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக மீண்டும் புதிதாக ஒரு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
இதன்காரணமாக அடுத்தடுத்து சுனாமி அலைகள் தாக்கலாம் என்பதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இதனிடையே இந்தோனேஷியாவை சுனாமி தாக்கியதைத் தொடர்ந்து,ஏற்கனவே சுனாமி எச்சரிக்கை விடப்பட்ட இந்தியா,இலங்கை,மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 28 நாடுகளிலும் உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment