ரஜினிகாந்த்,
அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா மற்றும் பலர்
நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார்
இயக்கத்தில் பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் படம் 'லிங்கா'.
இப்போது படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு
நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு வாரங்களுக்குள்
மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்று செய்திகள்
வெளியாகியுள்ளன.
ரஜினிகாந்த்
பிறந்த நாளான டிசம்பர் 12 அன்று
படத்தை வெளியிட முடிவு செய்துள்ளபடியால்
அதற்கேற்ற விதத்தில் அனைத்து வேலைகளும் மும்முரமாக
நடந்து வருகிறதாம்.ரஜினிகாந்துடன் அனுஷ்கா, சோனாக்ஷி ஆகியோர் டூயட் பாடும்
பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில் படத்தில்
த்ரிஷாவும் ஒரு பாடலுக்கு நடனமாட
உள்ளார் என்றும் தகவல்கள் வந்துள்ளன.
பத்து வருடங்களுக்கும் மேலாக
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தாலும்
த்ரிஷாவுக்கு இன்னும் ரஜினிகாந்த் ஜோடியாக
நடிக்கவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது
என பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.
இப்போது அந்த ஆசை 'லிங்கா'
படம் மூலம் நிறைவேறிவிடும் எனத்
தெரிகிறது.
படத்தில்
ஒரு முக்கியமான பாடல் காட்சியில் த்ரிஷா
நடனமாட சம்மதித்திருக்கிறாராம். அந்தப் பாடலில் ரஜினிகாந்தும்
நடிக்கலாம் என்கிறார்கள்.
No comments:
Post a Comment