கே.எஸ்.ரவிக்குமார் - ரஜினிகாந்த்
வெற்றிக் கூட்டணியில் உருவாகி வரும் லிங்கா
படம் வெளி வர இன்னும்
ஐம்பது நாட்களே உள்ள நிலையில்
படத்தைப் பற்றி தினமும் புதுப்
புது தகவல்கள் வெளியாகி வருகின்றன. இப்போதெல்லாம் பெரிய ஹீரோக்கள் நடிக்கும்
படங்களைப் பற்றிய பல விஷயங்களும்
மறைக்கப்பட்டுதான் வருகின்றன. படம் வெளியாகும் வரை
எந்தப் புகைப்படங்களையும் கூட வெளியிடுவதில்லை.
அதையெல்லாம்
விட படத்தில் யார் நடிக்கிறார்கள், அவர்களின்
கதாபாத்திரங்கள் என்ன என்பது கூடத்
தெரியாமலே போகிறது. அதையும் மீறி ஒரு
சில விஷயங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
லிங்கா
படத்தின் கதை முல்லைப் பெரியாறு
அணையைக் கட்டிய பென்னி குயிக்
பற்றிய ஒரு கற்பனை கலந்த
கதையாகத்தான் உருவாக்கப்பட்டுள்ளது என படம் ஆரம்பமான
நாளிலிருந்தே சொல்லப்பட்டு வருகிறது.
சமூக வலைத்தளங்களிலும் ஆளுக்கு ஒரு கதையை
எழுதி வருவதும் ஒரு ஃபேஷனாகவே ஆகி
விட்டது. ரஜினிகாந்த் இந்தப் படத்தில் அப்பா
மகனாக இரு வேடங்களில் நடிக்கிறார்
என்றுதான் முதலில் செய்திகள் வெளியாகின.
தற்போது
மூன்றாவதாக இன்னுமொரு கதாபாத்திரத்திலும் நடிக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
அதாவது, முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னி
குயிக் கதாபாத்திரத்திலும் அவரேதான் நடித்திருக்கிறாராம்.
படத்தில்
ஒரு சில காட்சிகளில் மட்டுமே
அந்தக் கதாபாத்திரத்தில் வந்தாலும் தென் தமிழக மக்களுக்கு
ஜீவாதாரமாக விளங்கி வரும் முல்லைப்
பெரியாறு அணையை உருவாக்கியவரின் கதாபாத்திரம்
என்பதால் ரஜினிக்கு இன்னும் அதிகப்படியான இமேஜ்
கிடைக்கும் என்பதால் அவரையே அந்தக் கதாபாத்திரத்தில்
நடிக்க வைத்திருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment