Saturday, November 6, 2010

சந்திரனுக்கு போகுது எந்திரன் ....


அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம் விண்வெளியில் பல ஆராட்சிகளை செய்து வருகிறது. வெண்வெளியில் சர்வ தேச ஆராட்சி நிறுவனத்தை நிறுவும் பணியும் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது . இதற்கிடையில்   சந்திரனுக்கு மீண்டும் விஞ்ஞானிகளை அனுப்ப முடிவு செய்திருந்தது. அதற்க்கு அமெரிக்க அரசும் சம்மதித்து  இருந்தது .

அதற்காக ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் கோடி செலவிட முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இப்போது அமேரிக்கா சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடியினால் இவ்வளவு பெரிய தொகையை இந்த திட்டத்துக்காக செலவிட அமெரிக்க அரசு விரும்பவில்லை அதனால், இதற்கு அதிக அளவு செலவாகும் என கருதி அதிபர் ஒபாமாவின் அரசு இந்த திட்டத்தை கைவிட்டது.

இந்த நிலையில், சந்திரனுக்கு எந்திர மனிதனை (ரோபாட்) அனுப்ப நாசா முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.1000 கோடிக்கும் குறைவாகவே செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவலை ஹீவ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மைய நாசா என்ஜினீயர்கள் தெரிவித்துள்ளனர். மனித குணங்களை கொண்ட எந்திர மனிதனை சந்திரனுக்கு பாதுகாப்பாக அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான பணி 1000 நாட்களில் முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த நாசா விண்வெளி மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் நம்ம எந்திரன் படத்தை பார்த்தாங்களா இல்லையா? அப்புறமா எந்திரன் சந்திரனில் போய் ஐஸ்வர்யா வேணும்னு அடம் பிடிச்சா இவங்கல்லாம் என்ன தான் பண்ணுவாங்க ......ஹி...ஹி...ஹி ...ர்.




ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் ... 

3 comments:

  1. தகவலுக்கு நன்றி... நாசா தயாரிக்கும் எந்திரன் பயனுள்ளதாக அமையட்டும்.

    ReplyDelete
  2. உங்கள் கமெண்ட் -க்கு நன்றி நண்பரே
    ரஜினியின் எந்திரன் திரையுலகில் சாதனை செய்தது போன்று நாசாவின் எந்திரன்சந்திரனில் சாதனை செய்யும் என்று நம்புவோம். . .

    ReplyDelete
  3. nasha anupija enthira vinkalam veriperq valthukal

    ReplyDelete