Wednesday, December 1, 2010

ஜனவரியில் அரசியல் கட்சி துவங்குகிறார் விஜய்



இளைய தளபதி என தனது ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விஜய், தனது ரசிகர் மன்றங்களின் நிர்வாகிகளுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். விரைவில் அவர் அரசியல் பிரவேசம் செய்வார் என்றும் கூறப்படுகிறது.

அரசியலுக்கு வருவேன் என்று வெளிப்படையாக ஏற்கனவே கூறியுள்ளார் விஜய். இருப்பினும் அதற்கேற்ற சமயம் வரும்போது முடிவெடுப்பேன் என்றும் ரசிகர்களிடம் கூறி வைத்துள்ளார். இடையில் அவரை காங்கிரஸுக்கு இழுக்க முயற்சிகள் நடந்தன. இருப்பினும் அது சரிப்பட்டு வரவில்லை.

 தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் படப்பிடிப்புக்காக செல்லுமபோதெல்லாம் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து அரசியல் பிரவேசம் குறித்து ஆலோசனையும், கருத்தும் கேட்டு வந்தார் விஜய்.

மதுரை, புதுக்கோட்டை, திருச்சி  உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகளின் கூட்டத்தில் விரைவில் அரசியல் பிரவேசம் இருக்கும் எனப் பேசினார். 

சில தினங்களுக்கு முன்பு உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற ரசிகர்மன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் அரசியல் குறித்துப் பேசினார்.

இந்த நிலையில் நேற்று திடீரென தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்து அவசர ஆலோசனை நடத்தியுள்ளார் விஜய். ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து அரசியல் இயக்கமாக மாற்றுவது குறித்தும் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களது நிலைப்பாடு குறித்தும், தலைமை அலுவலகம் அமைப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

சென்னை வடபழனியில் உள்ள விஜய்க்குச் சொந்தமான ஜே.எஸ். திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை மாலை இந்த ரகசிய ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றுள்ளது. தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த மாவட்ட, நகர, ஒன்றிய ரசிகர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், தன் அரசியல் நிலைப்பாடு குறித்து விஜய் மனம் திறந்து பேசியதாகவும், நிர்வாகிகளின் கருத்துகளைக் கேட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜயின் தந்தையும், திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அப்போது ரசிகர்களிடம் அரசியல் பிரவேசம் குறித்த கருத்துக்களைக் கேட்டுள்ளார். ரசிகர்களும் கண்டிப்பாக அரசியலில் குதிக்கலாம். புதுக் கட்சி தொடங்க இதுதான் சரியான நேரம் என்று விஜய்யிடம் கூறினார்களாம்.

மேலும் புதிய கட்சி தொடங்குவதை பொங்கலுக்கு முன்பே செய்து விட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். அப்போதுதான் வருகிற சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு நமது பலத்தை பரீட்சித்துப் பார்க்க முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

பெரும்பாலான நிர்வாகிகள், புதிய கட்சி தொடங்கிய பி்ன்னர் நாம் அதிமுக கூட்டணியில் சேர வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்களாம். இதைக் கேட்டு சற்று புருவம் உயர்த்தினாராம் விஜய். முதலி்ல நமது அரசியல் பிரவேசம் குறித்துப் பேசுங்கள், பிறகு கூட்டணி குறித்து யோசிக்கலாம் என்று கூறினாராம்.

கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருமே அரசியலில் புகலாம் என்று ஏகோபித்த குரலில் கூறியதால் சரி என்ற ரீதியில் பேசி அவர்களை அனுப்பி வைத்துள்ளாராம் விஜய். அனேகமாக இதனால் வரும் புத்தாண்டில் துவக்கத்திலேயே ஜனவரி மாதமே பொங்கலுக்கு முன்பாகவே பொங்கல் பரிசாக தனது ரசிகர்களுக்கு அரசியல் கட்சி துவக்கம் பற்றிய அறிவிப்பை வெளியிட தீவிர ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளாராம் விஜய் . 
விஜய் நடித்த சமீபத்திய படங்கள் வரிசையாக பெரும் தோல்வியைச் சந்தித்து வருகின்றன. நிலையான நடிகராக இன்னும் அவர் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளாமல் உள்ளார். இந்த நிலையில் அவரை அரசியல் தலைவர் என்ற புதிய கோணத்தில் தமிழக மக்கள் எப்படிப் பார்ப்பார்கள் என்பது மிகப் பெரிய கேள்வியாக உருவெடுத்துள்ளது. விஜயின் இந்த வளர்ச்சிக்கு காரணமானவர் அவருடைய தந்தை சுவ சந்திரசேகர் என்பது அனைவரும் அறிந்ததே அதை யாராலும் மறுக்கவும் முடியாது. இப்போது சிவனே என்று திரைப்படங்களில் நடித்துக்கொண்டு  இருந்த விஜய்யை உசுப்பேத்தி அரசியலுக்கு கொண்டுவருவதும் அவர் தான் என்பதும் யாராலும் மறுக்க முடியாத உண்மை. விஜய்யை இந்த அளவுக்கு வளர்த்து விட்ட அவருடைய தந்தையே விஜயின் வீழ்ச்சிக்கும் காரணமாக இருக்க போகிறார், என்பதே இன்று பலருடைய கருத்தாக 
இருக்கிறது.
அப்பாவே விஜயை உசுப்பேத்துறப்போ நாம சும்மா இருந்தா எப்படி நாமும் கொஞ்சம் உசுபபேத்தலாமா?

நான் அழகா 'மைக்' பிடிப்பேன் பார்த்தீங்களா?



 எம்.ஜி.ஆர் மாதிரி நானும் படிக்காம டாக்டர் ஆகிடேங்க 


 கலைஞர் 'வண்ணத்தொலைகாட்சி பெட்டி தான் கொடுத்தாங்க நான் 'கணினி' கொடுக்கிறேன் பாருங்க 


பிரியாணியும், ஐம்பது ரூபா கொடுத்து எங்களுக்கும் கூட்டம் சேர்க்க தெரியும். 



 'வால்போஸ்ட் ' தயாரா இருக்குங்கோ ...




  ஐயோ , நிஜ போலீஸ் பாதுகாப்பு


 இலவச திருமணம் 


எம்.ஜி.ஆர் மாதிரி நானும் வெல்ல குதிரையில எல்லாம் வரேன்பா என்னையும் முதல்வராக்குங்க 




 அரசியலுக்கு தேவைப்படும் என்று தான்...


எனது வாரிசு 

 உண்ணாவிரதம் 

     கட்சி கொடி

கட்சி உறுப்பினர் அட்டை 


இலவச கல்வி 


 மாலை, போர்வை ஐயோ .......நினச்சாலே பறக்கிற மாதிரி இருக்கே 


எல்லாவரும் என் கட்சிக்கு வாங்கப்பா 

 இதை மாதிரி நமக்கும் கூட்டம் வராதா....


இப்போ வெளியில்  நாளைக்கு கோட்டைக்குள் நினைக்கவே புல்லரிக்குதே 

அட, பாவிகளா ...இதெல்லாம் சொல்லி உசுப்பேத்தி விட்டீங்களே இப்படி உடம்பெல்லாம் ரணக்களம் ஆகும்ன்னு சொல்லவே இல்லையே ....வலிக்குது, வேணாம்...வேணாம் ...அழுதிடுவேன் ..

 ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் .

1 comment: