Friday, December 31, 2010

வடிவேலு மகனை ஹீரோவாக ஆக்க செலவு செய்த நான்கு லட்சம்

கோடியாக, கோடியாக சம்பாதித்தாலும் காசு விசயத்தில் மிகவும் கறாராக இருக்கிறார் வடிவேலு. சில மாதங்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம், இப்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

வடிவேலு தன் மகன் சுப்ரமணியை எப்படியாவது நடிக்க வைத்து முன்னணி ஹீரோவாக ஆக்க துடிக்கிறார். ஆனால் மகனுக்கோ நடிப்பு சுத்தமாக வரவில்லை. இதனையடுத்து தமது மகனை கூத்துபட்டறை ஒன்றில் சேர்த்துள்ளார். இதற்காக நான்கு லட்ச ரூபாயை மொத்தமாக கட்டியுள்ளார். ஆனால் மகனோ நான்கு நாள் கூட ஒழுங்காக பயிற்சிக்கு போகவில்லை. அப்பா என்னால் முடியாது என்று வடிவேலுவிடம் கூறிவிட்டாராம்.

இதனையடுத்து அந்த பயிற்சி நிறுவனத்துக்கு போன் செய்த வடிவேலு, என் மகன் நான்கு நாள் கூட பயிற்சிக்கு வரவில்லை, ஆகையால் நான் கட்டிய நான்கு லட்ச ரூபாயை திருப்பி தாருங்கள் என்று கேட்டுள்ளார். அந்த பயிற்சி நிறுவனமோ அப்படியெல்லாம் பணத்தை தர முடியாது. வேண்டுமானால் உங்கள் மகனை மீண்டும் பயிற்சிக்கு வரச்சொல்லுங்கள் என்று கூறிவிட்டனர். ஆனால் வடிவேலு தொடர்ந்து அந்த நிறுவனத்திடம் பணத்தை தரச் சொல்லி நச்சரித்து கொண்டு இருக்கிறார். 


No comments:

Post a Comment