Monday, January 24, 2011

ரஷ்யாவில் விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு: 31 பேர் பலி


ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் உள்ள டோமொதேடோவா விமான நிலையில் இன்று பயங்கர குண்டு வெடித்தது. இதில் 31 பேர் உடல் சிதறி பலியானார்கள். மேலும் 131 பேர் படுகாயம் அடைந்தனர்.

சம்பவ இடத்தில் அடர்த்தியான புகை மூட்டம் காணப்பட்டதாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.
விமானங்கள் பலவற்றின் வருகை தாமதப்பட்டுள்ளது.
தீவிரவாதக் குழுக்களின் தாக்குதல் இலக்காக ஏற்கனவே மாஸ்கோ நகரம் இருந்துள்ளது
காயம் அடைந்த அனைவரும் உடனடியாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுளனர். 

ரஷ்யாவில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு பின் நடந்த மிக மோசமான நிகழ்வாகும். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் நடந்த குண்டு வெடிப்பில் 40 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment