Sunday, February 27, 2011

நடுநிசி நாய்கள் கெளதம் மேனன் வீடு முற்றுகை

நடுநிசி நாய்கள் படத்தில் தாய்-மகன் உறவை கொச்சைப்படுத்தியிருப்பதைக் கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் இயக்குநர் கெளதம் மேனன் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த முயன்ற இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த 20 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கெளதம் மேனன் இயக்கி வெளியாகியுள்ள படம் நடுநிசி நாய்கள். இப்படத்தில் படத்தின் நாயகன் வீரா, தனது வளர்ப்புத் தாயுடன் உறவு கொள்வது போல காட்சி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படம் முழுக்க வக்கிரங்களும், வன்முறையும் தலைவிரித்தாடுவதாக சர்ச்சை வெடித்துள்ளது. வளர்ப்புத் தாய்-மகன் உறவுக் காட்சிகளுக்கு இந்து மக்கள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதைக் கண்டித்து கெளதம் மேனன் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப் போவதாக அது அறிவித்திருந்தது.

அதன்படி தரமணியில் உள்ள மேனன் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த இன்று அக்கட்சியினர் திரண்டனர். மேனனை கடுமையாக கண்டித்துக் கோஷங்களும் எழுப்பினர். இதையடுத்து அவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார், 20 பேரைக் கைது செய்தனர்.



No comments:

Post a Comment