Monday, February 28, 2011

காரைக் கவுத்திட்டீங்களேப்பா! -கவலைபடும் நடிகர்

கடும் குடிபோதையில் நடிகர்கள் பிரேம்ஜியும், விஜய் வசந்த்தும் பயணம் செய்த கார், டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி சாலையோரம் கவிழ்ந்து விட்டதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காரைப் போலீஸார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

நடிகர் விஜய் வசந்த், காங்கிரஸ் எம்.எல்.ஏ வசந்தகுமாரின் மகன் ஆவார். இவர் நாடோடிகள், சென்னை 600028 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு தி.நகர் வடக்கு உஸ்மான் சாலை, பசுல்லா சாலை சந்திப்பில் ஒரு பிரமாண்ட பிஎம்டபிள்யூ கார் கவிழ்ந்து கிடந்தது. இதைப் பார்த்த அப்பகுதியினர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

போலீஸார் விரைந்து வந்து காரை மீட்டு அதுகுறித்து விசாரித்தபோது அந்தக் கார், வசந்தகுமார் எம்.எல்.ஏ.வுக்குச் சொந்தமானது என்று தெரிய வந்தது. மேலும் காரில் நடிகர்கள் பிரேம்ஜியும், விஜய் வசந்த்தும் இருந்ததாகவும், இருவரும் நல்ல குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் காரை அவர்கள் ஓட்டவில்லை. டிரைவர்தான் ஓட்டி வந்தார். வேகமாக காரை ஓட்டுமாறு இரு நடிகர்களும் வற்புறுத்தியதால் வேகமாக காரை ஓட்டி அது சாலையோரம் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் டிரைவர் அக்பர் அலி காயமடைந்துள்ளார். அவரை போலீஸார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இருப்பினும் இதுதொடர்பாக பிரேம்ஜி, விஜய் வசந்த் மீது வழக்கு ஏதும் பதிவு செய்யப்பட்டதா என்பது தெரியவில்லை.

என்ன கொடுமை சார் இது, இப்படியா விபத்து ஏற்படுவது போல ஓட்டுவது?


No comments:

Post a Comment