Sunday, February 27, 2011

கவர்ச்சி நடிகை மும்மைத்கானின் புதிய அவதாரம் ...!


கவர்ச்சி நடிகை சோனாவை தொடர்ந்து, மற்றொரு கவர்ச்சி நடிகை மும்மைத்கானும் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். தமிழ், தெலுங்கு உட்பட தென் இந்திய சினிமாவில் தன்னுடைய கவர்ச்சியால் ரசிகர்களை கிரங்கடித்தவர் மும்மைத்கான். தமிழில் கந்தசாமி படத்தில் இவர் ஆடிய என் பேரு மீனா குமாரி... என்ற பாடல் மிகவும் பிரபலம். கவர்ச்சியால் சம்பாதித்த பணத்தை எல்லாம் தயாரிப்பில் போட முடிவெடுத்துள்ளார்.

மும்மைத்கான் புதிதாக "ஹவுஸ் சுகர் கேண்டி எண்டர்டெயிமென்ட்ஸ்" எனும் புதிய சினிமா கம்பெனி ஒன்றை தொடங்கியுள்ளார். அத்தோடு தெலுங்கில் பூரி ஜெகநாத் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்கவும் இருக்கிறார். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட இருக்கிறது.


No comments:

Post a Comment