Tuesday, February 22, 2011

பார்வதியம்மாளுக்கு பத்திரிகையாளர் எழுதிய அஞ்சலி கவிதை


பிரபாகாரனின் தாய், பார்வதியம்மாளின் மறைவுக்கு பத்திரிகையாளரும், பாடலாசிரியருமான நெல்லை பாரதி அஞ்சலி கவிதை ஒன்றை எழுதி பொதுமக்களுக்கு கொடுத்து வருகிறார்.

"வக்கற்ற தமிழனின் வீரவணக்கம்" என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள அந்த கவிதை:- 

சிகிச்சைக்காக வந்து நின்றாய்
கதவடைத்துக் கொண்டோம்
பால்கொடுத்த முலையறுத்த
பாவிகளாய் நின்றோம்

பாகிஸ்தான் குழந்தை வந்தால்
மருந்தளித்து மகிழ்ந்தது
பெற்றதாய்க்கு குணமளிக்க
தாயகமே பயந்தது

தமிழருக்காய் உயிர் கொடுத்தான்
நீ சுமந்த பிள்ளை -வீரத்
தாய்ப்பிணியைத் துடைத்துவிட
தமிழன் எவனும் இல்லை

ஆண்டவனும் ஆள்பவனும்
உன் குரலுக் கிரங்கல
நல்லவேளை உனது பாதம்
துரோக மண்ணில் இறங்கல

நோயும் உன்னைக் கொல்லவில்லை -எந்த
நாயும் உன்னைக் கொல்லவில்லை
மானங்கெட்ட தமிழர்கள்தான்
மரணத்தைப் பரிசளித்தோம்

பார்வதித்தாயே- இந்தப் பாவிகளை
ஆசீர்வதிப்பாயே

-நெல்லைபாரதி

1 comment:

  1. anna nangal thalaivanai thernthedukkavillai maraaga thalaivaliyai therntheduthuvittoam athanal vai pesa unarvirunthum oomaikalai akkappattuvittom..........

    ReplyDelete