Sunday, February 27, 2011

அர்ச்சகர் தேவநாதன் காட்சிக்கு சென்சார் தடை!


ஆலயத்தில் அர்ச்சகர் தேவநாதன்‌ கோயிலுக்கு வரும் பக்தைகளை மயக்கி, உல்லாசமாக இருந்த வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிவ சிவா என்ற பெயரில் புதிய படமொன்றை தொடங்கினார் டைரக்டர் சிவாஷ். நாயகர்களாக குமரன் கார்த்திக், சிவாஷ் ஆகியோரும், நாயகிகளாக சுஹானி, நட்சத்திரா ஆகியோரும் நடித்துள்ளனர். படத்தில் காஞ்சிபுரம் கோயில் அர்ச்சகர் தேவநாதன் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

சூட்டிங் முடிந்து தணிக்கைக்குழு சான்றிதழ் பெறுவதற்காக சென்சார் போர்டுக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள், தேவநாதன் தொடர்பான காட்சியில் இடம்‌பெற்றிருக்கும் வசனங்களை அனுமதிக்க மறுத்தனர்.  சர்ச்சைக்குரிய அந்த வசனத்தை நீக்கும்படி டைரக்டரிடம், ‌தணிக்கை குழுவினர் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து அர்ச்சகர் தொடர்பான காட்சிகயில் உள்ள வசனங்களை மட்டும் நீக்க டைரக்டர் சம்மதித்தார். இதையடுத்து வசனங்களை நீக்கி விட்டு யு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதுபற்றி இயக்குனர் சிவாஷ் கூறுகையில், "நாம் சாமி என்று கடவுளையும் கோவில் குருக்களையும்தான் ஒப்பிடுகிறோம். அந்த குருக்களே தப்பாக நடந்து கொள்ளும்போது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. காதல் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அதுவே குருக்களுக்கு வந்தால் சமுதாயம் எப்படி பாதிக்கப்படும் என்பதைத்தான் இந்தப் படத்தில் காட்சிபடுத்தியுள்ளோம். இப்படத்தில் அர்ச்சகர் தேவநாதனின் செக்ஸ் லீலைகள் பற்றி இடம் பெற்றுள்ள வசனங்களுக்கு தணிக்கை குழுவினர் ஆட்சேபம் தெரிவித்து நீக்கிவிட்டனர், என்றார்.


No comments:

Post a Comment