Saturday, April 30, 2011

ராஜபக்சேவை தூக்கிலிடக் கோரி ஆர்ப்பாட்டம்


ராஜபக்சேவையும், அவரது கூட்டாளிகளையும் தூக்கிலிட வலியுறுத்தி மதுரையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை அரசை கண்டித்தும், ராஜபக்சேவுக்கு எதிரான கோஷங்களையும் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் அகவன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,


இனப்படுகொலையில் ஈடுபட்ட ராஜபக்சே மற்றும் அவரது கூட்டாளிகளை ஐ.நா. சபை விசாரித்து சர்வதேச நீதிமன்றத்தில் தக்க தண்டனையை வாங்கிக் கொடுக்க வேண்டும். இலங்கை அரசுடன் உள்ள அனைத்து உறவுகளையும் இந்திய அரசு முறித்துக்கொள்ள வேண்டும் என்றார்.


No comments:

Post a Comment