Friday, May 27, 2011

சட்டசபை தேமுதிக குழுத் தலைவராக விஜயகாந்த் அறிவிப்பு


தமிழக சட்டசபை தேமுதிக தலைவராக விஜயகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

அதிமுகவுக்கு அடுத்த இடத்தை தேமுதிக பெற்றுள்ளதாலும், அக்கட்சியின் சட்டசபை கட்சித் தலைவராக விஜயகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாலும், விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகியுள்ளார்.

சட்டசபை கட்சித் துணைத் தலைவராக பண்ருட்டி ராமச்சந்திரன், கொறடாவாக வி.சி.சந்திரகுமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதாக கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரிக்கப்பட்டுள்ள விஜயகாந்த், இன்று புதிய சபாநாயகர் ஜெயக்குமாரை, அவை முன்னவர் ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து, சபாநாயகர் இருக்கையில் அமர வைத்து எதிர்க்கட்சித் தலைவராக தனது பணியை தொடங்கினார்..


No comments:

Post a Comment