Friday, July 1, 2011

கறுப்பு பணத்தை ஒழிக்கச் சொன்னா, 25 பைசாவை ஒழி்ததுள்ளனர்: மோடி

 கறுப்பு பணத்தை ஒழிக்கச் சொன்னால் அதற்கு பதிலாக 25 பைசாவை ஒழி்ததுள்ளது மத்திய அரசு என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கிண்டலடித்துள்ளார்.

அகமதாபாத்தில் புதிய பேருந்து நிலையம் ஒன்றை இன்று திறந்து வைத்தார் மோடி. அப்போது அவர் பேசுகையில்,

ஆயிரம் ரூபாய் நோட்டை ஒழி்கக வேண்டும் என்று பாபா ராம்தேவ் போராடுகிறார். கறுப்பு பணத்தை ஒழி்கக அது தான் ஒரே வழி. அவர் போராட்டத்திற்கு மக்களும் ஆதரவாக உள்ளனர்.

ஆனால் மத்திய அரசோ ஆயிரம் ரூபாய் நோட்டு்க்கு பதிலாக 25 பைசாவை ஒழி்ததுள்ளது. இது தானா கறுப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசு எடுக்கும் கடும் நடவடிக்கை?

காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை விட அகமதாபாத் மேயரால் மிக சிறப்பான நி்ர்வாகத்தை வழங்க முடியும்.

குஜராத் நியாய விலைக் கடைகளுக்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டின் அளவை ஒரே இரவில் மத்திய அரசு குறைத்துள்ளது. ஏன் குஜராத் மக்கள் இந்தியர்கள் இல்லையா? இத்தகைய செயல்பாட்டை மத்திய அரசு உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.




No comments:

Post a Comment