Sunday, July 31, 2011

கேரள மாணவி பாலியல் பலாத்கார வழக்கு-மேலும் 7 பேர் கைது

 கேரள மாநிலம் பரவூரை சேர்ந்த மாணவி கற்பழிப்பு வழக்கில் மேலும் 7 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் புரோக்கர் ஒருவர் கொடுத்த தகவலின் படி கொச்சியை சேர்ந்த ஜிஜோ ஆன்டனி, அனீஷ், சிஜோ ஆன்டனி, பாகினி், நிசாத், முகமது நியாஸ் மற்றும் தொடுபுழா பகுதியை சேர்ந்த பென்னி ஆகிய 7 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் அனைவரும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்துள்ளது.

இதுவரை நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்த வழக்கில் மொத்தம் 130 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதில் 60க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வழக்கில் தொடர்புடைய எஞ்சிய குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.




No comments:

Post a Comment