Sunday, July 31, 2011

கணவருடன் செல்ல மறுத்த நடிகை: குழந்தைகளை கண்டதும் மனம் மாறினார்


நாகர்கோவில் ராமன்புதூரைச் சேர்ந்தவர் ராஜா. இவருடைய மனைவி மீனா (வயது 27). துணை நடிகை. இவர் 24.4.2011 அன்று துபாயில் நடந்த கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்றார். இந்த மாதம் (ஜுலை) 23 ந் தேதி துபாயில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் வந்தார்.

பின்னர் அங்கிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த அவரை அழைத்து செல்ல ராஜா விமான நிலையத்தில் காத்திருந்தார். நீண்ட நேரமாகியும் வரவில்லை. இது குறித்து ராஜா விமான நிலைய போலீசில் புகார் செய்தார்.


விமான நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ரவீந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது துபாயில் இருந்து வந்த கேரளாவை சேர்ந்த உடற்பயிற்சியாளர் ஒருவருடன் மீனா இருப்பது தெரிய வந்தது.


போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் கேரள வாலிபருடன் தங்கியிருந்த மீனாவை கண்டு பிடித்து மீட்டனர். அப்போது மீனா, கணவருடன் செல்ல எனக்கு விருப்பமில்லை. கேரள உடற்பயிற்சியாளருடன் தான் செல்வேன்'' என்றார். பின்னர் இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.


மீனா மீட்கப்பட்ட தகவல் அறிந்ததும் அவருடைய கணவர் ராஜா, மீனாவின் தாய் விலாசினி, மகன்கள் அஜித், ஆனந்த் ஆகியோர் விமான நிலைய போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். கணவரை கண்டதும் அவருடன் மீனா பேசவில்லை. மீனாவைக் கண்டதும் அவருடைய மகன்கள் கண்ணீர் விட்டனர். மகன்கள் அழுவதை கண்ட மீனா மனம் மாறினார். குழந்தைகளை கட்டிப்பிடித்து அழுதார். பின்னர் குடும்பத்தினருடன் செல்ல விரும்புவதாக கூறினார்.


இதையடுத்து கணவர், தாய் மற்றும் மகன்களுடன் மீனா சென்றார். இதை கண்டதும் கேரளா வாலிபர் ரியாஸ் கண் கலங்கி விடை பெற்றார்.


No comments:

Post a Comment