Tuesday, October 25, 2011

வெற்றி சான்றிதழை திரும்ப பெற்றனர்: 98 வயது மூதாட்டிக்கு அதிகாரிகள் கொடுத்த அதிர்ச்சி


மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புதுக்குளம் 1-வது பிட் பகுதியில் 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 98 வயது மூதாட்டி தாடகத்தி என்பவர் போட்டியிட்டார். அதே பதவிக்கு மணிமாறன் மற்றும் வெள்ளைச்சாமி ஆகிய இருவரும் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் அதிகாரிகள் தவறுதலாக தாடகத்தி வெற்றி பெற்றதாக அறிவித்து அவருக்கு சான்றிதழையும் வழங்கி விட்டனர்.

இந்நிலையில் மணிமாறன் தரப்பினர் தாங்கள் தான் வெற்றி பெற்றதாகவும் அதிகாரிகள் தவறுதலாக மாற்றி அறிவித்து விட்டதாக மதுரை மாவட்ட கலெக்டர் சகாயத்திடம் புகார் செய்தனர்.   பின்னர் கலெக்டர் சகாயம் உத்தரவின்பேரில் வாக்கு எண்ணிக்கை சரி பார்க்கப்பட்டது. அப்போது தாடகத்தி தோல்வி அடைந்ததும் மணிமாறன் வெற்றி பெற்றதும் தெரியவந்தது.

இதை தொடர்ந்து தாடகத்திடம் கொடுக்கப்பட்ட வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரிகள் திரும்ப வாங்கி விட்டு மணிமாறன் வெற்றி பெற்றதாக அதிகாரிகள் அறிவித்தனர்.

இது குறித்து மூதாட்டி தாடகத்தி தரப்பினர் கலெக்டரிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அதிகாரிகள் திருப்பி வாங்கி கொண்டனர். இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று புகார் செய்தனர். பின்னர் கலெக்டர் உத்தரவின்பேரில் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


No comments:

Post a Comment