Friday, November 25, 2011

ஸ்ரீபெரும்புதூரில் சீரடி சாய்பாபா படத்தில் இருந்து குங்குமம் கொட்டியதாக பரபரப்பு


ஸ்ரீபெரும்புதூர் காந்தி ரோட்டைச் சேர்ந்தவர் மணிகண்டன். சாய்பாபா பக்தர். இவரது வீட்டு முன் அறையில் சாய்பாபா படம் வைத்து பூஜை செய்து வந்தார். இன்று காலை 10 மணி அளவில் பூஜை செய்த போது சீரடி சாய்பாபா படத்தில் இருந்து குங்குமம் கொட்டியது. சுமார் 1 அடி உயரத்திற்கு குங்குமம் கொட்டியதாக அவர் தெரிவித்தார்.

இந்த தகவல் நகரம் முழுவதும் பரவியது. ஏராளமான பெண்கள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் அவரது வீட்டுக்கு வந்து வழிபட்டு, குங்குமத்தை பிரசாதமாக பெற்றுச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


No comments:

Post a Comment