Tuesday, December 27, 2011

தனுஷ் அளித்த பரிசை வாழ்க்கையில் மறக்க முடியாது : தமன்னா!


'என்னுடைய பிறந்த நாளில் தனுஷ் அளித்த பரிசை வாழ்க்கையில் மறக்க முடியாது' என்று தமன்னா கூறினார். தமன்னா கூறியதாவது: சமீபத்தில் மும்பையில் எனது பிறந்தநாள் விழா கொண்டாடினேன். இதில் இலியானா, ஸ்ருதி ஹாசன், தனுஷ், அக்ஷரா உள்பட நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டனர். குறிப்பாக இலியானாவும், ஸ்ருதியும் என் உயிர்த் தோழிகள். அடிக்கடி மும்பையில் சந்திப்போம். எங்களுக்குள் ரகசியம் கிடையாது. எல்லா விஷயங்களையும் மனம்விட்டு பேசுவோம். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தனுஷ் எனக்காக 'ஒய் திஸ் கொலை வெறிடி' பாடலை பாடினார். இதை என் பிறந்த நாளுக்கு அவர் அளித்த மறக்க முடியாத பரிசு.


No comments:

Post a Comment