Sunday, February 26, 2012

ஏலத்திற்கு வருகிறது கொலவெறி புகழ் 3 படம் ஏலத்தில் எடுக்க நீங்க ரெடியா?


கொலவெறி டி பாடல் புகழ் 3 படத்தை ஏலத்தில் விற்க படத்தின் தயாரிப்பாளர் கஸ்தூரி ராஜா முடிவு செய்துள்ளார்.

3 படம் மூலம் ரஜினிகாந்தின் மூத்த மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா இயக்குனராகியிருக்கிறார். இந்த படத்தில் தனது கணவனை நாயகனாகவும், தோழி ஸ்ருதி ஹாசனை நாயகியாகவும் நடிக்க வைத்திருக்கிறார். படத்தை தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா தயாரித்திருக்கிறார். படத்திற்கு புதுமுகம் அனிருத் இசையமைத்திருக்கிறார்.

இதில் தனுஷ் பாடிய ஒய் திஸ் கொலவெறி டி பாடல் இந்தியா மட்டும் இன்றி உலகப் புகழ் பெற்றுள்ளது. இந்த பாட்டைக் கேட்ட பிரதமர் மன்மோகன் சிங் தனுஷ், ஸ்ருதியை அழைத்து விருந்து கொடுத்தார். இதனால் படத்தின் புகழ் மேலும் பரவியது. தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் வெளியாகும் இந்த படத்தை ரூ.50 கோடிக்கு வாங்க வினியோகஸ்தர்கள் தயாராக உள்ளனர்.

தனுஷின் திருடா திருடி படத்தின் `என்.எஸ்.சி.' வினியோக உரிமையை ஏலத்தில் விட்டது போன்று 3 படத்தையும் ஏலத்தில் விட கஸ்தூரி ராஜா முடிவு செய்துள்ளார்.


No comments:

Post a Comment