Wednesday, February 29, 2012

சிரியா ராணுவம் வெறிச்செயல்: ஒரே இடத்தில் 62 பிணங்கள் மீட்பு


சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் வலுவடைந்துள்ளது. அவர் பதவி விலக கோரி ஹோம்ஸ் நகரில் பொதுமக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

போராட்டத்தில் திரளும் மக்கள் மீது அதிபரின் தூண்டுதலால் ராணுவம் துப்பாக்கி, பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் நேற்று ஒரே இடத்தில் 62 பேர் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அரசின் தாக்குதலுக்கு பயந்து ஊரை விட்டு சென்ற அவர்களை கடத்தி சென்ற ராணுவத்தினர், ஈவு இரக்கமின்றி 62 பேரையும் கொன்றுள்ளதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment