Thursday, March 1, 2012

மதுரையில் மனைவியை ஆபாச படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டவர் கைது


மதுரையில் சிவகுமார் என்பவர் தன்மனைவி சரோஜினியை ஆபாச படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.பின்னர் தலைமறைவாக இருந்துவந்த சிவகுமார் இன்று மதுரை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிவகுமாருக்கும், சரோஜினிக்கும் பேஸ்புக்கில் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்து கடந்த டிசம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

திருமணத்திற்குப்பின் தன்மனைவியை ஆபாச படம் எடுத்த சிவகுமார், மனைவியின் ஐ-பேடு உள்ளிட்ட பொருள்களை திருடிவிட்டு சிங்கப்பூர் சென்றுள்ளார். அங்கிருந்தபடியே அந்த ஆபாச படங்களை அவர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

பின்னர் தலைமறைவாக இருந்த சிவகுமார் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


No comments:

Post a Comment