Friday, April 27, 2012

சச்சினை ராஜ்ய சபா உறுப்பினராக்கும் அரசின் பரிந்துரையை ஏற்பு


சச்சினை ராஜ்யசபா உறுப்பினராக்கும் அரசின் பரிந்துரையை ஏற்று குடியரசுத்தலைவர் உத்தரவிட்டார். இதன் மூலம் ராஜ்ய சபா உறுப்பினராகும் முதல் கிரிக்கெட் வீரர் சச்சின் என்பது குறிப்பிடத்தக்கது.
 
முன்னதாக, கடந்த வியாழனன்று காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்து இப்பதவியை ஏற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்திருந்தார் என்பது குறிபிடத்தக்கது.
 
இதை தொடர்ந்து இந்தியாவின் உயரிய விருதான பாரத் ரத்னா விருது கிடைப்பதற்கான வாய்ப்பு நெருங்கி வருவதாக வல்லுனர்கள் தெரிவிக்கிறனர். ஏற்கனவே மகாராஷ்டிரா அரசு இவ்விருதுக்கு சச்சினை பரிந்துரைத்திருந்தது குறிபிடத்தக்கது.


No comments:

Post a Comment