Saturday, May 26, 2012

புதுக்கோட்டையில் ஆளுக்கு 1000 மில்லி ரம், விஸ்கி, 1300 மில்லி பீர் மட்டுமே!


புதுக்கோட்டையில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து ஒரு தனிமனிதருக்கு இவ்வளவுதான் என்று மது விற்பனைக்கு டாஸ்மாக் நிறுவனம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

இந்தப் புதிய கட்டுப்பாட்டின்படி பீர், விஸ்கி, ஒயின் போன்றவற்றை ஒரு தனி மனிதர் அதிகபட்சம் தலா 2 பாட்டில்களை மட்டுமே வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் வெளியிட்டுள்ள உத்தரவு:

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளுக்கும் ஒரு தனிநபருக்கு அதிகபட்சமாக எவ்வளவு மதுபானங்கள், பீர் வகைகள் விற்பனை செய்யலாம் என்று ஆணையிடப்பட்டு உள்ளது. அதன்படி, அதிகபட்சமாக மதுபானம், அயல்நாட்டு மதுபான வகை, ஒயின் ஆகியவை தலா ஆயிரம் மில்லி லிட்டரும், பீர் 1,300 மில்லி லிட்டரும் விற்பனை செய்யலாம்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளிலும் தனிநபர்களுக்கு மேற்கண்ட குறிப்பிட்ட அளவு மட்டுமே மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 186 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இந்த கடைகளில் தினசரி ரூ.1 கோடி மதிப்புள்ள மதுபானங்கள் விற்பனையாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment