Tuesday, May 22, 2012

ஆந்திராவில் இரு ரயில்கள் மோதி, தீப் பிடித்து 25 பேர் பலி


ஆந்திராவின் அனந்தப்பூர் மாவட்டத்தில் இன்று அதிகாலையில் நடந்த கோர விபத்தில் பெங்களூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹம்பி எக்ஸ்பிரஸ், பென்னிகொண்டா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலுடன் மோதியதில், 25 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் காயமடைந்தனர்.

இந்த ரயிலில் இருந்தவர்கள் ஹூப்ளியிலிருந்து பெங்களூர் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தனர். அதிகாலை 3.15 மணியளவில் பென்னிகொண்டா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது ஹம்பி எக்ஸ்பிரஸ் மோதி விபத்துக்குள்ளானது.

காயமடைந்தவர்கள் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனற். 3 பெட்டிகள் விபத்து காரணமாக தடம் புரண்டுள்ளன. அதில் ஒரு பெட்டி தீப்பிடித்து எரிந்து விட்டது. மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக நடந்து வருகின்றன.

சிக்னலைக் கவனிக்காமல் ஹம்பி எக்ஸ்பிரஸ் ரயிலின் என்ஜின் டிரைவர் சென்றதே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.


No comments:

Post a Comment