Sunday, May 27, 2012

கருணாநிதியை சந்திக்க கோர்ட்டில் அனுமதி கேட்க்கும் ராசா...

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதான ஆ.ராசா கடந்த 15-ந்தேதி ஜாமீனில் விடுதலையானார். திகார் ஜெயிலில் 15 மாதம் சிறையில் இருந்த அவர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 

தற்போது டெல்லியில் இருக்கும் அவருக்கு அனுமதி இல்லாமல் சென்னை செல்லக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா 3-ந்தேதி சென்னையில் நடக்கிறது. இந்த விழாவில் கலந்து கொண்டு கருணாநிதியின் ஆசியை பெற ஆ.ராசா விரும்புகிறார். 

இதற்காக சென்னை வர அனுமதி கேட்டு அவர் மனு செய்கிறார். அனுமதி கிடைத்தவுடன் அவர் சென்னை வந்து கருணாநிதியை சந்திப்பார் என்று தெரிகிறது.




No comments:

Post a Comment