Sunday, May 27, 2012

உல்பா தீவிரவாதிகள் விடுத்த 'பந்த்' அழைப்பை புறக்கணித்தனர்


தருண் கோகாய் தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக பதவியேற்று  முதலாம் ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில் பங்கேற்க சோனியா அஸ்ஸாம் மாநிலத்திற்கு வந்திருந்தார்.
 
உல்பா தீவிவாதிகள் விடுத்திருந்த 12மணி நேர பந்த்திற்கு விடுத்த அழைப்பையும் புறக்கணித்து அக்கூட்டத்தில் சுமார் 10,000 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
 
ஆனால், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், நீதி மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. போக்குவரத்தும் மிக சொற்ப அளவிலேயே இருந்தது. அஸ்ஸாம் மாநிலத்தில் விடுமுறை தினமானதால் அனைத்து அரசு அலுவலகங்களும் மூடப்பட்டிருந்தது.
 
ஆனால் ரயில் மற்றும் விமான போக்குவரத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அஸ்ஸாம் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் தொண்டர்களை பேருந்துகளில் மாநாடு நடைபெறும் இந்திரா காந்தி மைதானத்திற்கு அழைத்து வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment