Wednesday, June 27, 2012

இங்கிலாந்தில் இலங்கை தமிழர் அடித்துக்கொலை

இலங்கையை சேர்ந்த தமிழர் பொன்னுதுரை நிமல்ராஜா (வயது 41). இவர் மீது இலங்கையில் வழக்கு இருப்பதாக தெரிகிறது. இதனால் அவர் அங்கிருந்து தப்பி குடும்பத்துடன் ஜெர்மனியில் தஞ்சம் அடைந்தார். பிறகு இங்கிலாந்து சென்று கிழக்கு மிட்லாந்து பகுதியில் வசித்தார். 

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொன்னுதுரைக்கும், சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அதில் அவர் தாக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனை அடுத்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து 6 சிறுவர்கள், ஒரு சிறுமி ஆகியோரை கைது செய்தனர். கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. பின்னர் போலீசாரே இந்த 7 பேரையும் ஜாமீனில் விடுவித்தனர்.




No comments:

Post a Comment