Saturday, June 23, 2012

சரத் பவாரின் ஐசிசி தலைவர் பதவி காலம் அடுத்த வாரம் முடிகிறது: ஆலன் ஐசக் அடுத்த தலைவர்

மலேஷியா தலைநகர் கோலாலம்பூரில் சர்வதேச கிரிக்கெட் கழகத்தின் வருடாந்திர மாநாடு நாளை முதல் 5 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாடு தலைமை நிர்வாக குழு கூட்டத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து நிர்வாக அதிகாரிகளின் கூட்டம் நடைபெறுகின்றன. 

இந்த கழகத்தின் தலைவராக சரத் பவார் பதவி வகிக்கிறார். கடந்த 2 வருடங்களாக இப்பதவியில் நீடித்து வரும் அவரது பதவி காலம் அடுத்த வாரத்தில் முடிவடைகிறது. 

இதனைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் இந்த மாநாட்டில் தனது பதவி பொறுப்பை நியூசிலாந்து நாட்டை சேர்ந்த ஆலன் ஐசக்கிடம் ஒப்படைக்கிறார் என கூறப்படுகிறது. 

மேலும் தற்போதைய நிர்வாக தலைமை அதிகாரி ஹரூன் லோர்காட்டை தொடர்ந்து டேவிட் ரிச்சார்ட்சன் அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும், துணை நிர்வாகிகள் 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.




No comments:

Post a Comment