Monday, July 30, 2012

நித்யானந்தாவை மிரட்டிய வழக்கு: சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆர்த்திராவ் சரண்

நடிகை ரஞ்சிதாவுடன் இருப்பது போன்ற ஆபாச வீடியோவை காட்டி தன்னிடம் பணம் கேட்டு மிரட்டியதாக முன்னாள் சீடர்கள் லெனின் கருப்பன், ஆர்த்திராவ் ஆகியோர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசில் நித்தியானந்தா புகார் செய்திருந்தார். 

எனவே, அவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் லெனின் கருப்பன் சி.பி.சி.ஐ.டி. போலீசில் சரண் அடைந்தார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து ஆர்த்திராவை போலீசார் தேடி வந்தனர். 

இந்நிலையில் முன் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் ஆர்த்திராவ் மனுதாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேரில் ஆஜராகி முன்ஜாமீன் பெறும்படி ஆர்த்திராவுக்கு உத்தரவிட்டது. 

அதன்படி இன்று காலை சைதாப்பேட்டை 11-வது கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு முருகன் முன்னிலையில் ஆர்த்திராவ் சரண் அடைந்தார். பின்னர் நிபந்தனை ஜாமீனில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.




No comments:

Post a Comment