Tuesday, July 24, 2012

நண்பர்களிடம் பழகுவதை நிறுத்திவிட்டேன் : சூர்யா


மனைவி குழந்தையுடன் நேரம் செலவிடுவதற்காக நண்பர்களுடன் பழகுவதை நிறுத்திவிட்டேன் என்றார் சூர்யா. இன்று பிறந்த நாள் கொண்டாடும் சூர்யா, கூறியதாவது: மாற்றான் படத்தில் ஒட்டிப்பிறந்த சகோதரர்கள் வேடத்தில் நடிக்கிறேன். தொடர்ந்து படப்பிடிப்பில் இருப்பதால் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க முடியவில்லை. என்னுடைய வேலையை பொறுத்தவரை முழுநேரமும் நான் செலவிட வேண்டி இருப்பதை உணர்கிறேன். அதேநேரம் நான் பொறுப்பான தந்தையாகவும் இருக்க விரும்புகிறேன். ஷூட்டிங்கில் இடைவெளி கிடைத்தால் உடனே ஜோ, தியா, தேவ் (ஜோதிகா மற்றும் பிள்ளைகள்) ஆகியோருடன் நேரம் செலவழிப்பேன்.

நான் எனது நண்பர்களுடன் எங்கும் வெளியில் செல்வதில்லை. சொல்லப்போனால் அவர்களுடன் போனில்கூட பேசுவதில்லை. உடற்பயிற்சி செய்வதென்றால்கூட என் குழந்தைகள் விழிப்பதற்கு முன்பே செய்து முடித்துவிடுவேன். அவர்கள் எழுந்ததும் அவர்களுடனேயே இருப்பேன். அவர்களுக்காக என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறேன். பள்ளி யுனிபார்ம் அணிவிப்பது, சாப்பாடு ஊட்டுவது, பள்ளிக்கு அழைத்துச் செல்வது என ஜோவுக்கு உதவியாக இருந்து செய்வேன்.


1 comment:

  1. உங்களது பதிவுகளை அழஹி.காம் என்னும் பதிவர் தளத்தில் பதிவு செய்து மற்றும் உங்களது நண்பர்களுக்கு அறிமுக படுத்துங்கள்
    Azhahi.Com

    இப்படிக்கு
    Azhahi.Com

    ReplyDelete