Monday, August 27, 2012

தென் அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் பீதி

தென் அமெரிக்காவில் மெக்சிகோ, பனாமா, எல்சால்வடார், கோஸ்டாரிக்கா, நிகரகுவா, ஹோண்டுராஸ், கவுதமாலா நாடுகளில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவாகி இருந்தது. 

இதனால் மத்திய அமெரிக்க கடலோர பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் மக்கள் பீதி அடைந்து பாதுகாப்பான இடங்களை நோக்கிச் சென்றனர். பின்னர் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. 

நிலநடுக்கத்தின்போது கட்டிடங்கள் பலமாக குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினார்கள். சேத விவரம் பற்றி தகவல் வெளியாகவில்லை.



No comments:

Post a Comment