Saturday, September 22, 2012

உதயகுமார் தலைமையில் மனிதச்சங்கிலி போராட்டம்


கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி தூத்துக்குடி ரோச் பூங்கா கடற்கரையில் பெண்கள் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் இடிந்தகரை, பெருமணல், கூத்தங்குளி பகுதியில் மீனவ கிராமங்களை சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினார்கள்.
கூத்தங்குளியில் நடந்த போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமை தாங்கினார். இதில் புஷ்பராயன் உள்ளிட்ட போராட்டக்குழு நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதேபோல் மீனவகிராமங்களை சேர்ந்த ஆண்கள் ஏராளமானோர் இடிந்தகரையில் படகுகளில் கடலுக்குள் சென்று, வரிசையாக நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.


No comments:

Post a Comment