Monday, January 31, 2011

திருச்சூரில் நவ்யா நாயர் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடந்தது

அழகிய தீயே படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நவ்யா நாயர். சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பாசக்கிளிகள், அமிர்தம், மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

நவ்யா நாயருக்கும் மும்பை தொழில் அதிபர் சந்தோஷ் மேனனுக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்தது. சமீபத்தில் இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு பெயர் சூட்டு விழா திருச்சூரில் உள்ள நவ்யாநாயர் இல்லத்தில் நடந்தது.

இரு வீட்டு உறவினர்களும் கலந்து கொண்டனர். கிருஷ்ணரின் தீவிர பக்தை நவ்யா நாயர். எனவே குழந்தைக்கு சாய் கிருஷ்ணா என பெயர் சூட்டப்பட்டது.

No comments:

Post a Comment