விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Saturday, June 11, 2011

    தேமுதிக எம்எல்ஏக்களுக்கு பிளாக்பெர்ரி-விஜய்காந்த் வழங்கினார்

    தொகுதி மக்களின் இ-மெயில்களை உடனுக்குடன் படிக்க வசதியாக தனது கட்சியின் எம்எல்ஏக்களுக்கு பிளாக்பெர்ரி செல்போன்களை வழங்கினார் தேமுதிக தலைவர் விஜய்காந்த்.

    தேமுதிக மாவட்டச் செயலர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் கூட்டம் இன்று காலை சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது.

    அப்போது தொகுதி மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்கும் இ-மெயில்களை உடனுக்குடன் தெரிந்து கொள்வதற்கு வசதியாக தேமுதிக எம்எல்ஏக்களுக்கு பிளாக்பெர்ரி செல்போன்களை விஜயகாந்த் வழங்கினார்.

    அரசு அலுவலகங்களில் லஞ்சம்-ஜெவுக்கு விஜயகாந்த் கோரிக்கை:
    இதற்கிடையே அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கோரிக்கை விடுத்தார்.

    சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், கவர்னர் உரையில் ஏழை- எளிய மக்களுக்கு நேரடியாக பயன்தரக்கூடிய மக்கள் நலத்திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அதே நேரத்தில், இந்த அரசு தொலைநோக்கு பார்வையுடன் வளர்ச்சி திட்டங்களுக்கும், கட்டமைப்புகளை உருவாக்கும் திட்டங்களுக்கும் அதே முக்கியத்துவத்தை அளித்து தமிழ்நாட்டை வளமான, வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் என்று குறிப்பிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

    இந்தத் திட்டங்களை செயல்படுத்தும்போது அரசு அதிகாரிகள், உண்மையான ஏழைகளுக்கு இவை கிடைக்க செய்யும் வகையில் ஊழலுக்கும், லஞ்சத்துக்கும் வழிவகுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    ஏழைகளே இல்லாத நாடு என்ற நிலையை உருவாக்குவது நமது லட்சியம். குறிப்பாக குடும்பத்தை மையமாக வைத்து வறுமை ஒழிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று சொல்லி இருப்பதை வரவேற்கிறேன்.

    இந்திய அரசும், திட்டக் கமிஷனும் இன்னும் ஏழைகள் யார் என்பதற்கு சரியான அளவுகோலை நிர்ணயம் செய்யவில்லை. எனவே உண்மையான வறுமைக்கோடு என்ன என்பதையும், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களையும் அடையாளம் கண்டு உதவும் வகையில் தெளிவான முடிவெடுக்க மத்திய அரசை தமிழகம் வற்புறுத்த வேண்டும்.

    பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகவும், ஏழைகள் பரம ஏழைகளாகவும் ஆகி வருகிறார்கள். இதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். இதற்காக வறுமை ஒழிப்புத் திட்டங்களை வகுக்க வேண்டும்.

    வறுமை எனும் நோய்க்கு வேலைதான் மருந்து. குரூப்-1 முதல் நிலைத் தேர்வில் 131 காலி இடங்களுக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் பேர் போட்டிப்போடுகிறார்கள். அதாவது ஒரு காலி இடத்துக்கு 1,000 பேர் போட்டியிடுகிறார்கள். அந்த அளவுக்கு படித்த இளைஞர்களிடையே வேலை இல்லை. இதுதவிர படிக்க இயலாத லட்சக்கணக்கான ஏழைகளும் வேலை இல்லாமல் தவிக்கிறார்கள். 

    கடந்த ஆட்சியில் ஆண்டுக்கு 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தொழில் கொள்கை அறிவிப்பில் கூறப்பட்டது. ஆனால் அது நடைமுறைப்டுத்தப்படவில்லை.

    அரசிடம் இருந்து தங்கள் தேவைகளைப் பெற ஏழை- நடுத்தர மக்கள் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. வருவாய் துறையில் சான்றிதழ் பெறவும், காவல்துறையில் புகார் கொடுக்கவும், போக்குவரத்து துறையில் லைசென்ஸ் பெறவும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறவும், மின்சார இணைப்புப் பெறவும், இலவச பட்டாக்கள் பெறவும் என சாதாரண காரியங்களுக்கே ஏழை- எளிய மக்கள் லஞ்சம் எனும் தொந்தரவுக்கு உள்ளாகிறார்கள்.

    புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள இந்த அரசு, சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள மக்களுக்கு நன்மை செய்யும் வகையில் கீழ் மட்டத்தில் உள்ள இந்த லஞ்சத்தை அறவே தவிர்க்க வேண்டும்.

    அரசின் நலத்திட்டங்கள் உண்மையான ஏழைகளை சென்று அடைவதில்லை. கடந்த ஆட்சியில் அதிலும் லஞ்சம் தாண்டவம் ஆடியது.

    சட்டம்- ஒழுங்கு அமைதியாக இருந்தால்தான் ஒரு நாடு முன்னேற முடியும். எனவே சட்டம்-ஒழுங்கு காப்பாற்றப்படுவது முதன்மையான ஒன்று. அதன்படி இந்த அரசு பொறுப்பு ஏற்ற உடனேயே சமூக விரோதிகளை உடனே கைது செய்ததன் மூலம் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். ஏற்கனவே வெளியில் இருந்தால் மட்டுமல்ல, வீட்டுக்குள் இருந்தாலும்கூட கொலைகளும், கொள்ளைகளும் சாதாரணமாக நடந்தன. எனவே மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வந்தனர். அத்தகைய நிலை இன்று இல்லை.

    குற்றவாளிகள் இன்று தவறு செய்ய பயப்படுகிறார்கள். சட்ட விரோதமாக பலரது சொத்துகள் பறிக்கப்பட்டுள்ளன. அந்த சொத்துக்களை மீட்டு உரியவர்களிடம் கொடுக்கும் அரசின் முடிவு சிறந்த நடவடிக்கை ஆகும். காவல் துறையில் அரசியல் தலையீடு இல்லாமல் திறம்பட செயல்பட வழிவகுத்த முதல்வரை மனதார பாராட்டுகிறேன்.

    தேவையற்ற சட்ட மேலவை நீக்கப்படுவதை தே.மு.தி.க. ஆதரிக்கிறது. புதிய தலைமை செயலக கட்டிடம் தொடர்பான முறைகேடு குறித்து விசாரணை நடத்தி உண்மையை மக்களுக்கு தெளிவுபடுத்த அரசு முன் வந்திருப்பது வரவேற்கத்தக்கது.

    என்றாலும், பல கோடி ரூபாய் செலவு செய்த அந்த கட்டிடம் வீணாக போய்விடாதபடி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர இந்த அரசு முழு கவனம் செலுத்த வேண்டும். கிராம சுகாதார நிலையங்களை மேம்படுத்தி உரிய மருத்துவர்களையும் செவிலியர்களையும் நியமிக்க வேண்டும்.

    எனது ரிஷிவந்தியம் தொகுதியில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. ரிஷிவந்தியம் தொகுதி முழுவதும் கரும்பு விவசாயம் பிரதானமாக உள்ளது. தொகுதியில் பாம்பு தொல்லையும் உள்ளது. பாம்புகடி சிகிச்சைக்குரிய மருந்து இல்லை. அது கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ரிஷிவந்தியம் தொகுதி மக்கள் மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையும் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த ஆட்சியும் தேர்வு செய்யப்பட்ட உடனேயே குறைகளை நீக்கிவிட முடியாது. அதற்கு கால அவகாசம் தேவை.

    1967ல் அண்ணா முதல்வராக இருந்தபோது காமராஜர் புதிய ஆட்சி பற்றி கருத்து சொல்ல 6 மாதம் பொறுத்து இருக்க வேண்டும் என்றார். அந்த கருத்து அரசியல்வாதிகள் அளவில் சிந்திக்க கூடியது. அரசு நல்ல காரியங்களை செய்யும்போது ஊக்கப்படுத்துவதும், குறைகளை சுட்டிக்காட்டுவதும் எதிர்க்கட்சியின் கடமை. அத்தகைய எதிர்க்கட்சியாக தே.மு.தி.க. செயல்படும் என்றார் விஜய்காந்த்.

    தேமுதிகவுக்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம்-விஜயகாந்த் பெருமிதம்:
    இந் நிலையில் தேமுதிக கட்சிக்கு தேர்தல் கமிஷன் அரசியல் கட்சிக்கான அங்கீகாரத்தையும், முரசு சின்னத்தையும் வழங்கியுள்ளது. 

    இது குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், 19.05.2011 அன்று தேமுதிக சார்பில் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்திற்கு அங்கீகாரம் கோரி கடிதம் அனுப்பப்பட்டது.

    நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக கட்சி 41 இடங்களில் போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றி பெற்றதையும், சுமார் 30 இலட்சம் வாக்குகள் பெற்றதையும் மேற்கண்ட கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. 

    கடந்த 1968ம் ஆண்டு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு மற்றும் ஒப்படைப்பு ஆணையின்படி ஒரு மாநில கட்சி அங்கீகாரம் பெறுவதற்குரிய தகுதிகளை தேமுதிக பெற்றுள்ளதால் இந்த அங்கீகாரம் கோரப்பட்டது. 

    இந்திய தேர்தல் ஆணையம் மேற்கண்ட கடிதத்தை முறையாகப் பரிசீலித்து தேமுதிகவுக்கு அங்கீகாரம் வழங்கி 10.06.2011 அன்று ஆணை பிறப்பித்துள்ளது.

    அதன்படி தேமுதிக தமிழ்நாட்டில் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியாகவும், அதற்கு முரசு சின்னம் நிரந்தரமாக ஒதுக்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.




    Posted by விழியே பேசு... at 4:31 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ▼  June (616)
      • பிரான்ஸ் அதிபர் சார்கோசி தாக்கப்பட்டார்
      • இலங்கையில் கொடூர சித்திரவதை-தாயகம் திரும்பிய மீனவர...
      • தமிழர்களை ஏமாற்றாதீர்கள் மன்மோகன்-நெடுமாறன் எச்சரி...
      • பொன்சேகாவுடனான மோதலுக்கு 'ரா' தான் காரணம்- ராஜபக்சே
      • ராஜபட்சேவுக்கு எதிராக சீமான் தேர்தலில் போட்டியிடலா...
      • உதயன் நாயகி விஜய்யுடன் இணைகிறாராம்!
      • வேங்கையை வாங்கிய திமுக விவிஐபி
      • ராணாவில் வடிவேலு இருக்காரா? கே.எஸ்.ரவிகுமார் பதில்
      • விஜய்யிடம் விசேஷ மாற்றம்?
      • விரைவில் 'சுகோயில்' பறக்கவிருக்கும் சச்சின், டோணி
      • அரசியல்வாதிகளெல்லாம் வெளியே போங்கப்பா- ஐசிசி அதிரடி!
      • ஸாரி, இன்னிக்கு ரீசார்ஜ் கிடையாது!
      • உப்பு என்ற போர்வையில் 10,000 கிலோ வெடிபொருள் கடத்தல்!
      • 2ஜி ஊழல்-அப்ரூவராவாரா கனிமொழி?
      • பிரதமரை சந்தி்த்தார் தயாநிதி மாறன்: பதவியை ராஜினாம...
      • சீனாவின் ஒப்பிடுகையில் நாம் சுண்டைக்காய்- மன்மோகன்
      • ''அஜீத் பற்றி ரகசியம் சொல்லவா?''
      • திரைப்படங்களை மிஞ்சிய காதல், சென்டிமென்ட்,ஆக்ஸன் க...
      • திருமண 'பாண்டில்' இணைந்த ஜேம்ஸ் பாண்ட்!
      • நடிகை அனுஷ்கா சர்மாவிடம் சுங்க அதிகாரிகள் அதிரடி வ...
      • இளைஞர்களை குடிக்கச் சொன்னேனா?-ஸ்ரேயா
      • ரஜினியின் 'அழைப்புகள்'!!
      • மொட்டை மாடியில் தேன்நிலவு! - செல்வராகவன்
      • பாலாவுக்கு இஸ்லாமியர்கள் கண்டனம்!
      • சிறந்த நடிகர் விக்ரம், சிறந்த வில்லன் ரஜினிகாந்த்
      • மு.க.ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து வீடியோ ஆதாரங்களுட...
      • மகனை நினைத்து கதறி அழும் கனிமொழி!
      • மத்திய அமைச்சரவையில் எங்களுக்கு இடம் தந்தது தப்பு!...
      • காங்கிரஸுக்குக் கொடுத்த ஆதரவு முடிந்து விட்டது -ஜெ...
      •  உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்டுள்ள சமச்சீ...
      • பிரபாகரனுடன் சேர்ந்து இலங்கைக்கு துரோகம் செய்தார் ...
      • 'சண்டை' போடாதீங்க-ரஜினிக்கு டாக்டர்கள் அட்வைஸ்!
      • தர்மஸ்தலாவில் சாமி முன்பு சத்தியம் செய்தார் குமாரச...
      • அப்துல்கலாம் கொடுத்த புத்தகம் : நடிகர் விவேக்
      • இலங்கை தமிழர்களுக்காக பதவியை துறந்தேன் : டி.ராஜேந்தர்
      • இந்திய அரசு எனக்கு விருது தர வேண்டும் : நாஞ்சில் ச...
      • விஜய் பட தயாரிப்பாளர் கைது
      • ராஜபக்சே கொல்லப்பட வேண்டும்- மதிமுக மாநாட்டில் தீர...
      • மசோதாக்களை உருவாக்குவதில் இனி மக்கள் பிரதிநிதிகளுக...
      • ரஜினியை காப்பி அடிக்கவில்லை- நஸ்ருதீன் ஷா
      • ஹர்ஷிகாவின் இரு கண்கள்!
      • இஃபா விழாவில் ரஜினியின் ரோபோட்டுக்கு 3 விருதுகள்
      • கருணாநிதி அரசு செய்த தவறுகளும், அதிமுக அரசு கற்க வ...
      • 'அதப் பத்தி எழுதாதே': நிருபர்களுக்கு ஆசின் டோஸ்!
      • அடுத்த வாரம் அமைச்சரவை மாற்றம்- தயாநிதி மாறன் நீக்...
      • ஸ்டாலினுக்கு வயதாகி விட்டது, தமிழகத்தின் அடுத்த மு...
      • சாய்பாபா ஆசிரமத்தில் கொள்ளை புட்டபர்த்தி மக்கள் போ...
      • வெளியூர்களில் 1-ந்தேதி முதல் மின்வெட்டு 3 மணியில் ...
      • வாஸ்துவாவது, மாற்றமாவது... ரஜினி வீட்டு செய்தியில்...
      • ஜெயலலிதாவுடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு
      • பிரபுதேவாவைச் சந்திக்காமல் விரதமிருந்த நயன்தாரா!
      • காவல் நிலையத்தில் 'கலாட்டா' செய்த தேமுதிக எம்எல்ஏ:...
      • சீமானுக்கு ஆப்ப்பு : ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வ...
      • தனுஷின் புதிய அவதாரம்!
      • ஏழைகளுக்கு ஆடு, மாடு கொடுக்கும் திட்டம்: ஜெ., ஆலோசனை
      • இலங்கை அரசை கட்டாயப்படுத்துங்கள்: இந்தியாவுக்கு சர...
      • முதல்- அமைச்சரின் காரை நிறுத்தி வாழ்த்து கூறிய மாண...
      • நடிகர் தனுஷ் நடித்த வேங்கை படத்துக்கு இடைக்கால தடை
      • சிம்புவை இந்தியில் அறிமுகப்படுத்த துடிக்கும் கெளதம்
      • வரிச்சலுகை உண்டா இல்லையா?
      • ''புதிய அலைகள்'' அணியின் வெற்றி!
      • ரஜினி நலம்... ரசிகைகள் நேர்த்திகடன்
      • ஒசாமாவின் கடைசி கடிதம் !
      • முன்னாள் காதலி ஐஸ்வர்யாராய்க்கு வாழ்த்து சொன்ன சல்...
      • தொடரும் விஜயகாந்தின் ரௌடிசம் : மகனுக்கு சீட் மறுப...
      • பின்லேடனின் செல்போன்கள் மூலம் பின்லேடன்- ஐஎஸ்ஐ தொட...
      • வாலியுடன் விஜயகாந்த் சந்திப்பு அரசியல் ஆலோசனைகளா?
      • மகனுக்கு வீடு வாங்க கடன் வாங்கிய சச்சின்!
      • சென்னை திரும்பியதும் ரசிகர்களைச் சந்திக்கிறார் ரஜினி!
      • மகனுக்கு கொலை மிரட்டல்: அவசரமாக மதுரை திரும்பிய அழ...
      • ரஜினி வழியில் விஜய்!
      • கார்த்திக்கு ஜோடியாக அனுஷ்கா!
      • பாடல் ஆசிரியரான லாரன்ஸ்!
      • ரஜினிகாந்த் வீடு வாஸ்து சாஸ்திரப்படி புதுப்பிக்கப்...
      • 12ம் வகுப்பு மாணவனுடன் ஆசிரியை ஓட்டம்
      • பறக்கும் படை : நடிகர் விவேக் அதிரடி
      • 'மங்காத்தா' ரிலீஸ் தியதி !
      • விஜய்யை அடுத்து இயக்குவது யார்? : விஜய் பதில்
      • வெற்றி ‌தோல்வி என்னை பாதிக்காது: ஹாரிஸ் ஜெயராஜ்!
      • செங்கடல்: கட் இல்லாமல் அப்படியே அனுமதித்த ட்ரிப்யூ...
      • அஜித்தின் புதிய அவதாரம் பில்லா
      • போதையில் பெண்களிடம் எஸ்ஐ சில்மிஷம்-தப்பவிட்ட போலீசார்
      • பாலா படத்தில் நடிக்க ஆசை: சோனியா அகர்வால்!
      • கிருஷ்ண லீலை தாமதம்! கண்ணீர் வடிக்கும் டைரக்டர்!!
      • ஹன்சிகாவின் தொழில் பக்தி!
      • கமலுடன் ரொமான்ஸ்க்கு தயாராகும் மற்றொரு பாலிவுட் நட...
      • அஜீத் முத்தம் தர மறுக்க நான் என்ன பேயா பிசாசா? - த...
      • ஜூலை 15ல் பிரசாந்தின் மம்பட்டியான்!
      • ஜாகீர் கானுடன் என்ன உறவு...? இஷா சர்வானி விளக்கம்!
      • அமலா பால்க்கு அக்காவான சமீரா!
      • நடிகர் கார்த்தி திருமணம்! கோவையில் 3ம்தேதி நடக்கிற...
      • மீனவர்களுடன் இணைந்து போராட்டம்- சீமான்.
      • இராமாயண வாலியா ரஜினி?
      • அது ரஜினி எழுதிய கடிதமா? சந்தேகம் கிளப்பும் பிரமுக...
      • மனிதனாக இரு சல்மான்கான்
      • அவன் இவன்.... வசூலில் சாதனை!
      • கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி
      • கோவிலில் சத்தியம் செய்யும் விவகாரம்: எடியூரப்பா பி...
      • 'பிரபாகரனின் குடும்பம்'.. தப்பா சொல்லிட்டேன்! - மன...
      • சொத்துகள் பறிபோனால் என் செய்வது : சிறையில் மெழுகுவ...
      • ஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது...
      • இது தாண்டா ரஜினி ! ராணாவில் மீண்டும் வடிவேலுவுக்கு...
      • போர்க்குற்ற அறிக்கை: ஐநாவுக்கு இலங்கை அளித்த ரகசிய...
      • 3 மாதத்தில் அரசு கேபிள் டிவி: ஜெ திட்டம்!!
      • கருணாநிதிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ஜெயலலிதா
      • நடிகர் வடிவேல் மீண்டும் அடிவாங்கியுள்ளார்: மா.கம்யூ.
      • காதலிக்கு 60 வயது: அதிர்ச்சியில் தூக்கில் தொங்கி த...
      • காங்கிரசுக்கும் தி.மு.க.வுக்கும் உள்ள உறவு எப்படி ...
      • பொதுமக்களுக்கு அவஸ்தையை கொடுத்த விஜய் பிறந்தநாள் (...
      • விஜய்யைப் பற்றிய சில தகவல் துளிகள்
      • கனிமொழிக்கு தனி அறை!
      • பாடலாசிரியர் ஆனார் தனுஷ்
      • ராணாவில்தீபிகா படுகோனேவுடன் டூப் ரஜினி ? வெளிவரும...
      • ரஜினியின் வருகைக்காக ஆவலோடு காத்திருக்கிறார்கள் ர...
      • பஞ்சு-70: ரஜினி, கமல் வாழ்த்து!
      • சாய்பாபா ஆசிரமத்தில் பல கோடி கொள்ளை...
      • பிரபாகரன் மனைவி, மகள் உயிருடன் இருக்கிறார்கள் : இல...
      • லோக்பால் சட்டத்தில் பிரதமரையும் சேர்க்க வேண்டும்-த...
      • ஐஸ்வர்யா ராய் கர்ப்பம்-அமிதாப்பச்சன் தகவல்
      • 'இத யார் கிட்ட போய் சொல்லுறது' ; எடியூரப்பா -குமா...
      • படுக்கை அறை காட்சியை படம் பிடித்தவர்கள் கைது
      • கதாநாயகன் ஆகும் சிவாஜிகணேசனின் பேரன்
      • என்னா பெரிய பொய்யி.... ஜெ ரூ.9 லட்சம், கருணாநிதி ர...
      • மலேசியாவில் எம்ஜிஆர் சிலை: திறந்து வைக்கிறார் சத்ய...
      • அமிதாப் உடல்நிலை திடீர் பாதிப்பு!
      • ரஜினியை சிங்கப்பூரில் சந்தித்து நலம் விசாரித்த பிர...
      • கமல் படம்: கதக் ஆட வராததால் ஸ்ரேயாவுக்கு கல்தா?
      • ரகசிய கேமராக்கள்-மைக்ரோபோன்கள்: உளவு பார்க்கப்பட்ட...
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.