பழுத்த அரசியல்வாதி போல ஆகிவிட்டார் விஜய்யும். அவ்வப்போது நாட்டு நடப்புகள் குறித்து அறிக்கைகள் வெளியிடுவது, முடிந்தால் பேட்டிகளில் லேசாக அவ்விஷயங்களை டச் பண்ணுவது என்று 'ஹோம் வொர்க்' சற்று அதிகமாகவே வெளிப்படுகிறது.
நேற்று முன் தினம் சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம் உலக தமிழர்கள் மத்தியில் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. இது பற்றி ஒரு நாள் முழுக்க உட்கார்ந்து யோசித்திருப்பார் போலிருக்கிறது. சற்று தாமதமாக இன்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார் விஜய். (ம்ஹ¨ம் இவ்வளவு டிலே ஆகாதுங்க. அப்புறம் எப்படி நாற்காலியை புடிக்கிறது?) அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என்று அறிவிக்க ஐ.நா சபையை இந்தியா வலியுறுத்த வேண்டும். இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்கவும் வலியுறுத்த வேண்டும் என்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் தமிழக சட்டசபையில் ஏகமனதாக நிறைவேறியிருக்கிறது.
இது தொடர்பாக இன்று அறிக்கை வெளியிட்டிருக்கும் விஜய், உரிமைகளையும் உறவுகளையும் இழந்து பல்வேறு நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு இது ஆறுதலான விஷயம். இனி வரும் காலங்களில் இலங்கை தமிழர்கள் அமைதியோடும் சந்தோஷத்தோடும் சரிசமமான உரிமைகளோடு வாழ வேண்டும். அதற்காக இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார் விஜய்.

No comments:
Post a Comment