Tuesday, March 27, 2012

சென்னை தம்பதி கதையில் நித்யா மேனன்

 சென்னையில் வாழும் ஒரு தம்பதியின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் தயாராகிறது. இதுபற்றி கன்னடப் பட இயக்குனர் நாகாஷேகர் கூறியதாவது:
பல்வேறு கொலை வழக்குகளை கையாண்ட உதவி போலீஸ் கமிஷனர் அசோக்குமார் என்பவர் சொன்ன உண்மை கதைகளில் ஒரு கதையை படமாக்க இருக்கிறோம். ஏனென்றால் இந்த கதை அவ்வளவு சுவாரஸ்யமானது. ஒரு பெண்ணுக்காக பல கொலைகளை செய்தவனின் கதை இது.

ஏன் அப்படி செய்தான் என்பதற்கான காரணங்கள் வியக்கத்தக்க வகையில் இருக்கும். இது உண்மை கதை. இந்த ஜோடி திருமணம் செய்துகொள்ளாமல் இப்போதும் சென்னையில் வசித்து வருகிறது. இதில் போலீஸ் அதிகாரியாக, சரத்குமார் நடிக்கிறார். ஹீரோவாக சேத்தனும் ஹீரோயினாக நித்யா மேனனும் நடிக்கிறார்கள். உடல் ஊனமுற்றவராக இவர் நடிக்கிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்.


No comments:

Post a Comment