தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான தேர்தல் வருகிற 19ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில், தலைவர் பதவிக்கு பாரதிராஜா மீண்டும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. பாரதிராஜாவை எதிர்த்து தலைவர் பதவிக்கு அமீர் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநர்கள் ஒற்றுமை தொடரும் என்றும், பாரதிராஜாவை தலைவராகக் கொண்டும், அமீரை செலாளராக் கொண்டும் மற்ற முன்னணி இயக்குநர்களோடு தேர்தலைச் சந்திக்கத் தயாராகிவிட்டோம். என அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதுகுறித்து இயக்குநர் அமீர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திரைப்பட இயக்குநர்களின் சங்கத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடக்கவிருப்பது அறிந்ததே. இதில் அமீர் ஆகிய என்னைத் தலைவராகக் கொண்டு சேரன், ஜனநாதன் மற்றும் 12க்கும் மேற்பட்ட முன்னணி இயக்குநர்களின் துணையோடும், புதிய சிந்தனைகளோடும் சங்கத்தின் தேர்தலைச் சந்திக்கத் தயாராகியிருந்தோம்.
மறுபுறம் ஏற்கனவே பதவி வகித்த பாரதிராஜா, செல்வமணி ஆகியோரின் அணியும் போட்டியிட்டது. ஆனால் சங்கத்தின் நன்மை கருதி.. திரையுலகில் இயக்குநர்களின் ஒற்றுமையை உணர்த்தும் கடமை வேண்டி.. இரு வேறு பிரிவாக இருப்பதை மறந்து, கருத்து வேறுபாடுகளைக் கலைந்து..
பாரதிராஜா தலைவர் பதவிக்கும், அமீராகிய நான் பொதுச்செயலாளர் பதவிக்கும்.. ஜனநாதன் பொருளாளர் பதவிக்கும் மற்ற முன்னணி இயக்குநர்களின் துணையோடு அதே நோக்கங்களையும், புதிய சிந்தனை, புதிய திட்டங்களோடு தேர்தலில் போட்டியிட முடிவெடுத்துள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

No comments:
Post a Comment