Tuesday, March 29, 2011

விஜயகாந்த்துடன் ஜெயலலிதா ஒரே மேடையில் பேச மறுப்பதற்கு காரணம் உள்ளது: திருமாவளவன்


நடிகர் விஜயகாந்த்துடன் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஒரே மேடையில் பேச மறுப்பதற்கு காரணம் உள்ளதாக தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.


அரக்கோணம் தொகுதி விடுதலைச் சிறுதிதைகள் கட்சி வேட்பாளரை ஆதரித்துப் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்,


விஜயகாந்த் குடித்துவிட்டு சட்டசபைக்கு செல்வதாக ஜெயலலிதா கூறினார். குடித்துவிட்டு விஜயகாந்த் உளறுகிறார் என்று ஜெயலலிதா சொன்னார். உடனே நீங்கதான் ஊத்தி கொடுத்தீங்களா என்று விஜயகாந்த் கேட்டார்.


தற்போது கூட்டணி அமைந்தவுடன் விஜயகாந்த் ஆடி ஆடி பேச, இந்த அம்மா அவரை ஒரு


சைடாக பார்க்க, சரி விஜயகாந்த் சொன்னது போலத்தான் நடந்திருக்கு என்று மக்கள் நினைப்பார்கள் என்றுதான் இருவரும் ஒரே மேடையில் ஏறுவதில்லை.

அதிமுக கூட்டணி அமைத்தவுடன் இதுவரை அந்த தலைமை கூட்டணி கட்சித் தலைவர்களுடன் மேடை ஏறியிருக்கிறார்களா? அரசியல் நாகரீகத்தை அதிமுக அணியில் பார்க்க முடியுமா? அதிமுக அணி கொள்கை உறுதி இல்லாதது என்றார்.

 இன்றைய பதிவுகள்...






No comments:

Post a Comment