Thursday, March 31, 2011

மொஹாலி போட்டி:நெஞ்சுவலியால் உயிரிழந்த நடிகர்


இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உலகக்கோப்பை அரை இறுதிப் போட்டிக்காக சிறப்பு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாகிஸ்தானின் பிரபல காமெடி நடிகர் ஒருவர் நெஞ்சுவலியால் உயிரிழந்தார்.


லியாகத் சோல்ஜர் என பரவலாக அழைக்கப்படும் 55 வயதான லியாகத் அலி அரை இறுதிப் போட்டிக்காக உள்ளூர் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தார்.

திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக டெய்லி டைம்ஸ் பத்திரிகைத் தகவல் தெரிவிக்கிறது.

லியாகத் அலி நடிகராக மட்டும் அல்லாமல், தொழில் அதிபராகவும் இருந்தார். ஜெனரேட்டர்கள் தொடர்பான ஒரு வணிகத்தைச் செய்துவந்தார்.


லியாகத் அலியின் மறைவுக்கு பல்வேறு தொலைக்காட்சி பிரபலங்களும், அரசியல்வாதிகளும் இரங்கல் தெரிவித்தனர்.


பாகிஸ்தானின் சிறந்த நகைச்சுவை மேடை நாடக நடிகர்களில் லியாகத் அலியும் ஒருவர். அவரது இழப்பு பாகிஸ்தானின் நகைச்சுவைத் துறைக்கு பெரும் இழப்பு என பலரும் அவருக்கு புகழஞ்சலி செலுத்தினர்.


இன்றைய பதிவுகள்...






No comments:

Post a Comment