பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14 திரைக்கு வரும் என்று தயாரிப்பாளரால் அறிவிக்கப்பட்ட அஜீத்தின் என்னை அறிந்தால் படம் திடீரென பொங்கல் ரேஸிலிருந்து விலகிக் கொண்டது.
பொங்கல் தினத்தில் தொடர்ச்சியாக விடுமுறை வருவதால் பெரிய படங்கள் பொங்கல் தினத்தில் வெளியாக ஆர்வம் காட்டும். ஷங்கரின் ஐ ஜனவரி 9 -ஆம் தேதியே திரைக்கு வருகிறது. ஜனவரி 14 என்னை அறிந்தால், ஆம்பள படங்கள் வெளியாகும் என கூறப்பட்டது.
இரு படங்களுக்கே திரையரங்குகள் போதாத நிலையில் மூன்று படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்குமா என்பது சந்தேகத்துக்குரிய கேள்வியாக இருந்தது. இந்நிலையில், படத்தின் இறுதிகட்டப் பணிகள் இன்னும் நிறைவடையாததால், என்னை அறிந்தால் பொங்கலுக்குப் பதில் ஜனவரி இறுதியில் திரைக்கு வரும் என தயாரிப்பாளர் தரப்பு கூறியுள்ளது.
என்னை அறிந்தால் படத்திற்கு திரையரங்குகள் கிடைக்குமா என்பது சந்தேகத்துக்குரிய கேள்வியாக இருந்தது. போதிய திரையரங்குகள் கிடைக்காத்தாலும் , ஐ படத்தின் பிரமாண்டத்திற்கு அனைத்து விதமான ரசிகர்களிடமிருந்தும் கிடைத்துள்ள அமோக வரவேற்புமே என்னை அறிந்தால் தள்ளி போக காரணமாக சொல்லப்படுகிறது.
இந்த திடீல் விலகல், அஜீத் ரசிகர்களை பெருத்த ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளது. அதேநேரம் ஆம்பள படத்துக்கும், ஐ -க்கும் கணிசமான திரையரங்குகள் கிடைக்கும்.
இழப்பிலும் ஒரு லாபம்.
கேரள தொழிற்சாலையில் வேலை பார்க்கும் 40 பெண் ஊழியர்களை ஆடை அவிழ்த்து சோதனை நடத்திய நிர்வாகத்திற்கு எதிராக 'நாப்கின்' அனுப்பும் போராட்டத்தை பேஸ்புக் மூலம் தொடங்கியுள்ளனர்.
கொச்சியிலுள்ள அஸ்மா ரப்பர் பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்தில், டிசம்பர் 10ம்தேதி ஒரு மோசமான சம்பவம் நடைபெற்றது.
அந்த நிறுவனத்தின் கழிவறையில் மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்தும் நாப்கினை யாரோ ஒரு பெண் போட்டுள்ளார். கழிவறையில் அதை வீசக்கூடாது என்பது அலுவலக விதிமுறையாகும்.
நிர்வாண சோதனை
விதிமுறையை மீறி நாப்கினை போட்ட பெண்ணை கண்டுபிடிப்பதற்காக, அங்கு பணியாற்றிய 40 பெண்களையும், ஆடையை அவிழ்த்து யாருக்கு மாதவிடாய் வருகிறது என்பதை சோதித்து பார்த்துள்ளனர் அங்குள்ள 2 பெண் சூப்பர்வைசர்கள்.
இந்த சம்பவம் சிறிது நாட்களுக்கு பிறகு மீடியாக்களில் வெளியாகியது. இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 27ம்தேதி அலுவலக சூப்பர் வைசர்களுக்கு எதிராக, போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து, கேரள பெண்கள் கமிஷனும் இந்த பிரச்சினையை கையில் எடுத்துள்ளது.
பேஸ்புக் பக்கம் திறப்பு
இதனிடையே பேஸ்புக்கில், குறிப்பிட்ட நிறுவனத்துக்கு எதிராக "Red Alert: You've Got a Napkin!"என்ற பெயரில் பிரச்சாரம் தொடங்கியுள்ளது. இந்த பேஸ்புக் பக்கத்தை திருவனந்தபுரத்தை சேர்ந்த மாயா லீலா என்ற இளம் பெண் முன்னெடுத்துள்ளார்.
இவர், தற்போது ஸ்பெயினில் பிஹெச்டி படித்து வருகிறாராம். மேலும், ஏற்கனவே கேரளாவை கலக்கிய, முத்த போராட்டம் குறித்த கோஷத்தை முன்வைக்க பேஸ்புக்கை பயன்படுத்தியதும், இதே குழுதான் என்று கூறப்படுகிறது.
நாப்கின் அனுப்ப கோரிக்கை
இந்த நாப்கின் போராட்ட பேஸ்புக் பக்கத்தில் கொச்சியிலுள்ள குறிப்பிட்ட நிறுவனத்தின் முகவரி தரப்பட்டுள்ளது. அந்த முகவரிக்கு பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் நாப்கின்களை அனுப்பலாம்.
பயன்படுத்தியதையோ அல்லது பயன்படுத்தாதையோ என எதை வேண்டுமானாலும் நிறுவன மேலாளருக்கு அனுப்ப வேண்டும் என்பது இந்த கோஷத்தின் கோரிக்கை. ஏற்கனவே சிலர் நாப்கின்களை அனுப்பிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முத்த போராட்டம்
பொது இடத்தில் நடத்தப்பட்ட முத்த போராட்டம் ஓய்ந்து தற்போது நாப்கின் போராட்டம் கேரளாவில் புயலை கிளப்பி வருகிறது.
வரலாற்று உண்மைகளுக்குப் புறம்பாக பேசுவதை பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்திய வரலாற்று ஆய்வு கவுன்சில் வலியுறுத்தி உள்ளது.
யானை தலையுடன் விநாயகர் இருப்பதன் மூலம் ஆதி காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி முறையை இந்தியர்கள் பின்பற்றியதாக பிரதமர் மோடி பேசியதற்காகவே வரலாற்று கவுன்சில் குட்டு வைத்துள்ளது.
வரலாற்று அறிஞர்கள், ஆர்வலர்கள் 10 ஆயிரத்தும் மேற்பட்டோர் அங்கம் வகிக்கும் வரலாற்று ஆய்வு கவுன்சிலின் 80-ஆம் ஆண்டையொட்டி டெல்லி ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி இந்த நிகழ்வில் தொடக்க உரையாற்றினார்.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: வரலாற்றில் அறிவியல் அணுகுமுறையைச் சிதைக்கும் முறையில் புராதன புராணங்களின் அடிப்படையில் வரலாற்றை மாற்றி எழுதக்கூடாது.
துரதிர்ஷ்டவசமாக பிரதமர் மோடியே கூட ஆதி காலத்திலேயே இந்தியர்கள் பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற அறுவை சிகிச்சைகளை அறிந்திருந்தார்கள் என்றும் பின்னர்மறந்துவிட்டார்கள் என்றும் கூறியிருக்கிறார்.
பல்வேறு வெறித்தனமான அணுகுமுறைகளுடன் வரலாற்றைத் திருத்தி எழுதக்கூடாது. அவ்வாறு வரலாற்றைச் சிதைப்பதிலிருந்து இந்திய வரலாற்றைப் பாதுகாத்து, இந்தியாவின் பெருமையை மீண்டும் நிலைநாட்டிட வேண்டும்.
மிகவும் தான்தோன்றித்தனமான அல்லது பொறுப்பற்ற அறிக்கைகள், இந்தியா குறித்து உலக அளவில் உள்ள நல்ல பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்திவிடும். இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி சொன்ன சர்ஜரி கதை
பிரதமர் நரேந்திர மோடி கூட்டம் ஒன்றில் பேசுகையில்... விநாயகர் தலையில் யானையின் தலையை ஆதி காலத்திலேயே
பொருத்தியிருக்கிறார்கள்..அப்படியெனில் அந்த காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி முறை இருந்திருக்கிறது. அதை நாம் மறந்துவிட்டோம் என்று கூறியிருந்தார்.
பிரதமர் மோடியின் இந்த புராணகால 'சர்ஜரி' பேச்சுக்குத்தான் வரலாற்று ஆய்வு கவுன்சில் குட்டு வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கேரள மாநிலம் கொச்சியில் ஒரு தனியார் நிறுவனத்தில் டாய்லெட்டில் நாப்கினைப் போட்டது யார் என்பதைக் கண்டுபிடிக்க அந்த நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களை, சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட அறையில் கொண்டு போய் ஆடைகளைக் களைந்து நடத்தப்பட்ட சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சோதனையால் பாதிக்கப்பட்ட பெண் போலீஸில் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மாநில மகளிர் ஆணையமும் இன்த சோதனை குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த கொடுமையான சோதனையை அந்த நிறுவனத்தின் இரண்டு பெண் மேற்பார்வையாளர்கள் நடத்தியுள்ளனர்.
அவர்கள் இருவர் மீதும் போலீஸார் தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளனர். கொச்சியில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் அஸ்மா ரப்பர் பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனம் உள்ளது.
இங்கு ஏராளமான பெண் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இந்த நிறுவனம் மீது அதில் பணியாற்றி வரும் ஒரு பெண் போலீஸில் புகார் கொடுத்தார்.
அதில், டிசம்பர் 10ம் தேதி எங்களது நிறுவனத்தின் டாய்லெட்டில் ஒரு பயன்படுத்தப்பட்ட நாப்கின் கிடந்துள்ளது. இதனால் கோபமடைந்த இரண்டு பெண் மேற்பார்வையாளர்கள் யார் இதைப் போட்டது என்று பெண் ஊழியர்களை அழைத்துச் சப்தம் போட்டனர்.
ஆனால் யார் போட்டது என்று தெரியவில்லை. இதையடுத்து 50 வயதுக்குட்பட்ட பெண் ஊழியர்களை, மொத்தம் 45 பேர், ஒரு தனியறைக்கு அவர்கள் வரவழைத்தனர். அந்த அறையில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
அந்த அறையில் வைத்து அனைத்துப் பெண்களையும் ஆடைகளை கழற்றச் சொல்லி அந்த இரு பெண் மேற்பார்வையாளர்களும் சோதனையிட்டனர். இந்த சோதனை எங்களுக்கு பெரும் மன உளைச்சலையும், அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சோதனை நடத்திய அந்த இரு பெண் மேற்பார்வையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்தப் புகார் கொடுக்கபப்ட்ட நான்கு நாட்கள் கழித்தே திரிகக்ககரா காவல் நிலையம் அதை பதிவு செய்துள்ளது. தற்போது அந்த இரண்டு பெண் சூப்பர்வைசர்கள் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் லிஸ்ஸி ஜோஸ் கூறியுள்ளார். விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் வாழ்க்கை சினிமா படமாகிறது. இதில் அவரது இரண்டாவது மனைவி கேரக்டரில் கரீனா கபூர் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட்டில் முன்னணி ஆட்டக்காரராக இருந்த அசாருதீனின் சொந்த வாழ்க்கை பரபரப்பும் விறு விறுப்பும் நிறைந்தது. இவருக்கு இரண்டு மனைவிகள், முதல் மனைவி நவ்ரீன். 9 வருடங்கள் இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தினர்.
பிறகு அசாருதீன் வாழ்க்கையில் இந்தி நடிகை சங்கீதா பிஸ்வானி வந்தார். இதையடுத்து முதல் மனைவியை விவாகரத்து செய்தார். சங்கீதா பிஸ்வானியை 1996–ல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
2011–ல் அசாருதீனின் மகன் அயாசுதீன் ரோடு விபத்தில் மரணம் அடைந்தார். அசாருதீன் கிரிக்கெட் சாதனைகளையும் குடும்ப வாழ்க்கையையும் உள்ளடக்கிய படமாக இது தயாராகிறது. இப்படத்தில் அசாருதீன் கேரக்டரில் இம்ரான் ஹாஸ்மி நடிக்கிறார். முதல் மனைவி நவ்ரீன் வேடத்துக்கு பிராச்சி தேசாய் தேர்வாகியுள்ளார். இவர் இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் நவ்ரீனை நேரில் சந்தித்து பேசி கேரக்டருக்கு தன்னை தயார்படுத்தி வருகிறாராம்.
அசாருதீனுக்கு நெருக்கமாக இருந்த கிரிக்கெட் வீரர்களிடமும் பேசி வருகிறார். இரண்டாவது மனைவி சங்கீதா பிஸ்வானி வேடத்தில் கரீனாகபூர் நடிப்பார் என்று கூறப்படுகிறது. படவேலைகள் விறுவிறுப்பாக துவங்கி உள்ளன.