விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Tuesday, October 18, 2011

    வாக்குச்சாவடிக்குள் ஓட்டு சீட்டுகளை கிழித்து ரகளை: தி.மு.க. பூத் ஏஜெண்டுகள் 3 பேர் கைது


    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள மண்டவாடி கிராமத்தில் உள்ள சின்னமண்டவாடி வாக்குச்சாவடி அருகே கட்சி தொண்டர்கள், பிரமுகர்கள் நின்று கொண்டு, தங்களுக்கு வாக்களிக்கும்படி, வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்டு இருந்தனர்.

    வாக்குப்பதிவு தொடங்கிய சுமார் 15 நிமிடத்தில், தி.மு.க.வை சேர்ந்த பூத் ஏஜெண்டுகள் கிருஷ்ணமூர்த்தி (வயது 32), பழனிவேல் (37), கருப்புசாமி (46) ஆகியோர் தேர்தல் அலுவலர்களிடம், வெளியே நிற்கும் கட்சிகாரர்களை அப்புறப்படுத்துங்கள் என கூறினர்.

    இதை கேட்ட கட்சிக்காரர்களுக்கும், பூத் ஏஜெண்டுகளுக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பூத் ஏஜெண்டுகள் 3 பேரும் சேர்ந்து வாக்குச்சீட்டுகளை கிழித்தும், அடையாள மை பாட்டில்களை கீழே தூக்கி போட்டு உடைத்தும், மையை கீழே கொட்டியும் ரகளையில் ஈடுபட்டனர். அரசு அலுவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்தனர்.

     இதனால் வாக்களிக்க வந்த வாக்காளர்கள் அனைவரும் வாக்குச்சாவடிக்குள் செல்லாமல் ஆங்காங்கே மரத்தடியில் நின்றனர். இது தொடர்பாக தி.மு.க. பூத் ஏஜெண்டு கிருஷ்ணமூர்த்தி, பழனிவேல், கருப்புசாமி ஆகியோரை கைது செய்தனர். இதனால் சுமார் 11/2 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

    பின்னர் காலை 8.45 மணிக்கு அமைதியாக வாக்குப்பதிவு தொடங்கியது.   திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், பாளையங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு, கூலம்பட்டியைச் சேர்ந்த சுமதி உட்பட 7 பேர் போட்டியிட்டனர்.

    நேற்று மாலை 4 மணிக்கு, கூலம்பட்டி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருந்தபோது, திடீரென வாக்குச்சாவடி மையத்திற்குள் நுழைந்த, தலைவர் வேட்பாளர் சுமதியின் கணவர் பாலமுருகன், அவரது தம்பி உமாமகேஸ்வரன் மற்றும் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு, போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் விஜய ஆனந்த் உள்ளிட்ட 10 பேர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை மிரட்டி, 85 வாக்குச் சீட்டுகள் மற்றும் முத்திரை குத்தும் கட்டை, மை பேடு உள்ளிட்டவைகளை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

     இந்த சம்பவத்தால் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பிறகு 4 ஓட்டுகள் இந்த சம்பவம் தொடர்பாக செம்பட்டி போலீசார், ஊராட்சி தலைவர் வேட்பாளர் சுமதியின் கணவர் பாலமுருகன், உமாமகேஸ்வரன் விஜய ஆனந்த் உள்பட 10 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர். 

    மதுரை அருகே தொப்புலாம்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளியில் 3 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு நேற்று ஓட்டுப்பதிவு நடந்த போது இரு தரப்பினர் தங்களது வேட்பாளர்களுக்கு வாக்காளர்களிடம் ஆதரவு கேட்டனர். இதனால் ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றி கைகலப்பில் ஈடுபட்டனர்.

    இரு தரப்பினரும் அரிவாள், கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களால் மோதிக்கொண்டனர். இதில் ஒரு பெண் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதைப்பார்த்ததும் அங்கு ஓட்டுப்போட வந்திருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு சிதறி ஓடினர். அப்போது மோதலில் ஈடுபட்ட ஒருதரப்பை சேர்ந்தவர்கள் கும்பலாக சென்று மறியல் செய்ய முயன்றனர்.

    போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.   fதிண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு ஊராட்சி தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்ற போது, வேட்பாளர்கள் ஆதரவு திரட்டிக்கொண்டு இருந்தனர். அப்போது இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு அரிவாளால் வெட்டிக்கொண்டனர்.

    இதில் 2 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். பழனியை அடுத்த மொல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் ஒரு பெண் வாக்காளரின் ஓட்டுச்சீட்டை தி.மு.க. பூத் ஏஜெண்டு பொன்ராஜ் மற்றும் அக்கட்சியை சேர்ந்த செங்கோடன் ஆகியோர் வாங்கி பெட்டிக்குள் போட முயன்றதாக கூறப்படுகிறது. இதற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் மோதல் ஏற்பட்டது. அப்போது நடந்த கல்வீச்சில் அ.தி.மு.க.வை சேர்ந்த சின்னத்துரை (வயது 25) என்பவரும், சப்- இன்ஸ்பெக்டர் மதனகலாவும் காயம் அடைந்தனர். 

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் வாக்குச்சாவடிகளின் வெளியே ஓட்டப்பட்டு இருந்த வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் வரிசையும் வாக்குச்சாவடிகளுக்குள் இருந்த பட்டியலின் வரிசையும் மாறி இருந்ததால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வேட்பாளர்கள் பின்னர் தங்கள் ஆதரவாளர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு சிறிது நேரம் தாமதம் ஆனது.

    நாகர்கோவில் அருகே உள்ள புத்தேரி பாறையடி வாக்குச்சாவடி முன்பு, தங்களுக்கு பூத் சிலிப் வழங்கப்படவில்லை என்று கூறி பலர் மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் வந்து பூத் சிலிப்புகள் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததை போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர்.

    ஈரோடு மாவட்டம் கொண்டையம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் ஒரு சின்னத்தில் குத்திய மை அடுத்த சின்னத்திற்கும் பரவியதாக ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் கணேசன் என்பவர் புகார் கூறியதோடு, அந்த வாக்குச்சாவடியையும் இழுத்து பூட்டினார். இதனால் ஓட்டுப்போட வந்த வாக்காளர்கள் திகைத்தனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் சென்று அவரிடம் பேசி சமாதானம் செய்தனர்.

    இந்த சம்பவத்தின் காரணமாக அந்த வாக்குச்சாவடியில் 2 மணி நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. வால்பாறை நகராட்சியின் 19-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிடும் புதிய தமிழகத்தை சேர்ந்த எல்.சாமி என்பவர் நேற்று அதிகாலை வீட்டை விட்டு வெளியே வந்த போது முகமூடி அணிந்த மர்ம மனிதர்கள் சிலர் அவரை காரில் கடத்தி சென்றதாக தகவல் வெளியானது.

    காலை 10 மணி அளவில் அவர் புதிய தமிழகம் ஒன்றிய செயலாளர் ராம்குமாரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு சிலர் தன்னை கடத்திச்சென்று காட்டுப்பகுதியில் வைத்து இருப்பதாகவும், தான் இருக்கும் இடம் தெரியவில்லை என்றும் கூறினார். இதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, போலீசார் வேட்பாளர் சாமியை தேடி வந்த நிலையில், மாலை 6.45 மணிக்கு அவர் வீடு திரும்பினார். சாமி முன்னுக்குப்பின் முரணாக பேசுவதால் அவர் கடத்தப்பட்டது உண்மைதானா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். fஅரக்கோணம் அருகே செம்பேடு கிராமத்தில் உள்ள ஓட்டுச்சாவடியில் வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் வாக்குச்சீட்டில் 4-வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பதிலாக, 5-வது வார்ட்டில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுபற்றிய தகவல் அறிந்து அதிகாரிகள் வந்து விசாரணை நடத்திய போது 5-வது வார்டுக்கு தர வேண்டிய வாக்குச்சீட்டுகள் 4-வது வார்டுக்கு மாற்றி தரப்பட்டது தெரியவந்தது. பின்னர் அந்த தவறு சரி செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த வாக்குச்சாவடியில் காலை 8 மணி முதல் 11.30 மணி வரை வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. 

    தஞ்சையில் உள்ள நகராட்சி உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில், பூத் ஏஜெண்டுகள் ஓட்டுப்போடுவது தொடர்பாக தி.மு.க.- அ.தி.மு.க. பூத் ஏஜெண்டுகளுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு இரு தரப்பு தொண்டர்களும் கூடி மோதிக் கொண்டனர்.

    இதில் 29-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் அன்பழகனின் சட்டை கிழிந்தது. தி.மு.க. பூத் ஏஜெண்டு சீனிவாசனின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. மேலும் ஒருவரும் காயம் அடைந்தார். இதனால் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    விருத்தாசலம் அருகே கழுதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடிக்குள் நேற்று மாலை 4 மணி அளவில் 5 பேர் புகுந்து ரகளையில் ஈடுபட்டதோடு, 250 வாக்குச்சீட்டுகளை பறித்துக் கொண்டு ஓடி விட்டனர்.

    இதனால் அங்கு வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. அந்த நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.   குத்தாலம் தாலுகா வழுவூர் வாக்குச்சாவடியில் அ.தி.மு.க.வினர் கள்ள ஓட்டு போடுவதாக கூறி தி.மு.க.வினர் புகார் தெரிவித்ததோடு சாலை மறியலிலும் ஈடுபட்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராமர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.


    Posted by விழியே பேசு... at 9:15 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ▼  October (453)
      • ராஜபக்சே பேச்சு: கனடா பிரதமர் புறக்கணிப்பு
      • கனிமொழியின் ஜாமீனை ஏன் எதிர்க்கவில்லை : சி.பி.ஐ.க்...
      • தந்தை தந்த முழு சுதந்திரம்: ஸ்ருதி பெருமிதம்
      • சிறையில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வருக்கு அடி உதை
      • நடிகை வைஷ்ணவி தற்கொலை- டிவி நடிகருக்கு 5 ஆண்டு சிறை
      • திமுகவை மக்கள் தோற்கடித்தது ஏன்?: ஸ்டாலின் 'கண்டுப...
      • அடுத்த படத்திலும் அஞ்சலிதான்... முருகதாஸ்
      • ஒஸ்தியின் விலை... ஓங்கி ஒலிக்கும் சிம்பு
      • அதிக முத்தம் வாங்கியவர்கள் பட்டியலில் ரித்திக்?
      • அணு உலை வெடித்தால் மத்திய அரசு என்ன செய்யும்?- சீம...
      • மனைவியுடன் சேர்ந்து நிகிதாவிடம் மன்னிப்பு கேட்ட பி...
      • 2ஜி இழப்பு ரூ.1.76 லட்சம் கோடி அல்ல, ரூ.2,645 கோடியே
      • ஈழ விடுதலை நோக்கி தமிழ் சினிமாவின் பார்வை திரும்பி...
      • சென்னை வங்கிகளை சூறையாடி வரும் ஏடிஎம் கொள்ளையர்கள்...
      • சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆசைகள் என்ன? ருசிகர த...
      • ''துரோகச் சிந்தனையினர்''- பரிதி மீது கருணாநிதி மறை...
      • ரேப் சீனுக்கு மட்டும் தான் கூப்பிடுறாங்க: வருத்தப்...
      • மருத்துவமனையில் மனோரமா- கமல்ஹாசன் நேரில் நலம் விசா...
      • நம்புங்கள்... அடுத்த வாரம் அரசுத் துறைகளில் லஞ்சம்...
      • த்ரிஷா கார்த்திகா - 'தாமு'
      • 'மயக்கம் என்ன' அடுத்த வாரம்
      • 90 கசையடியில் இருந்து தப்பிய நடிகை
      • கமலின் 'ஷூ லேஸ்' டெக்னிக்!
      • அஜித்துடன் ஜோடி சேர மறுத்த நடிகை!
      • ஆக்ஷ்ன் கிங்குடன் ஜோடிசேர மறுத்த நடிகை!
      • 3 பேரை தூக்கில் போட வேண்டும் என்பதுதான் தமிழக அரசி...
      • வைகோ இன்னமும் திருந்தவில்லை: கலைஞர்
      • நடிகைகளின் 'தொடைகளுக்கு' நடிகர் சங்கம் தடை?
      • மதுரையில் 7-ஆம் அறிவு படத்தை பார்த்த மு.க.ஸ்டாலின்
      • `சீன் போடாதே'
      • அத்வானி பாதையில் குண்டுவைத்தது குமரி மாவட்டத்தினர்
      • விஜய்யின் 3 படங்கள்
      • அனுஷ்கா - தமன்னா மீது இலியானா பரபரப்பு புகார்!
      • தோற்றவர்கள் வென்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர் - ம...
      • கருணாநிதியைப் போலவே ஜெயலலிதாவும் ஏமாற்றிவிட்டார் -...
      • சிவாஜி, கமலஹாசனை போல் நடிப்பாற்றல் எனக்கு கிடையாது...
      • என் இமேஜ் போயிருச்சே...! ஆண்ட்ரியா கவலை!!
      • கோமா நிலையில் சிகிச்சை: நடிகை மனோரமா கவலைக்கிடம்
      • அமைச்சர் உறவினர் கொலை :சிபிஐ பிடியில் டாக்டர் ராம...
      • அடையாறில் மசாஜ் சென்டரில் விபசாரம்; 2 பேர் கைது பெ...
      • கேரளாவில் வசூலை குவிக்கும் தீபாவளி தமிழ் படங்கள்
      • செல்வராகவன்- தனுஷை பழிவாங்க சிம்புவுடன் கூட்டணி அம...
      • நடிகை ஓட்டம்? படப்பிடிப்பில் சிக்கல்
      • அது சிக்ஸ் பேக் இல்ல, சிங்கிள் பேக் - விஜய் கலகலப்பு
      • 'இந்த போர்க்குற்றவாளியை கூண்டிலேற்றுங்கள்!'
      • 3 பேரையும் தூக்கில் போடுமாறு தமிழக அரசு கேட்டு கொண...
      • நடிகை அஞ்சலிக்கு மிரட்டல்: நடிகர் கரண் கண்டனம்
      • ஜீவாவுடன் ஜோடி சேரக்கூடாது: ரிச்சாவுக்கு சிம்பு தடை
      • எம்ஜிஆர் - ரஜினி பாணியில் ....விஜய் பேச்சு!
      • சீரியலில் நடிக்கும் இளம் ஹீரோவின் மனைவி!
      • நடிகையின் 5 தங்கைகளுக்கு வலைவீசும் டைரக்டர்கள்!
      • இருந்தா இப்படி இருக்கணும் ; மாறுபட்ட தீர்ப்பை வழங்...
      • கலைந்தது ஜெயலலிதா வேஷம் :மூவருக்கும் தண்டனை ரத்து ...
      • கருணாநிதியின் முழு கட்டுப்பாட்டில் தி.மு.க. இல்லை;...
      • கமலை இயக்க போவது உண்மையா : வெங்கட்பிரபு பேட்டி
      • சின்னத்திரையில் விஜய்
      • 7ஆம் அறிவு ,வேலாயுதத்தோடு மோத வரும் படங்கள்
      • காட்டு காட்டு காட்டுனு காட்றார். " : உதயநிதி
      • பாதை விலகிய ஹஸாரே!- டீம் அன்னாவிலிருந்து விலகியவர்...
      • ஆச்சிக்கு ஒன்றும் இல்லை ஆறுதல் தரும் தகவல்கள்
      • கமல் இயக்கத்தில் இயக்குனர் !
      • விஜயின் 'யோஹன் - அத்தியாயம் 1' பற்றி கௌதம் மேனன் ...
      • செயற்கை ரத்தம் தயாரித்து இங்கிலாந்து விஞ்ஞானிகள் ...
      • வைரமுத்துவுக்கு உரிமை கொடுத்த கமல்
      • “7 ஆம் அறிவு” படத்தில் சிறப்பான நடிப்பு: ஸ்ருதிக்க...
      • 2ம் நாளில் ரூ.25 கோடியை அள்ளிய ரா ஒன்!
      • 3 பேரின் தூக்கு தண்டனையை தமிழக அரசு ரத்து செய்ய மு...
      • உலகின் பணக்கார இந்தியர் முகேஷ் அம்பானி...
      • அ.தி.மு.க.வுடன் கூட்டணியா? மதுரையில் அத்வானி பேட்டி
      • சொந்த வாழ்க்கையில் தலையிடகூடாது !
      • சச்சின் முடிவை மாற்றிய அஞ்சலி
      • மதுரையில் அத்வானியை கொல்ல சதி :ரதயாத்திரை செல்லும்...
      • ராஜீவ்காந்தி கொலை கைதிகளின் மரண தண்டனையை ரத்து செய...
      • முன்னாள் பிரதமர் தேவே கௌடா மீது ஊழல் வழக்கு பதிவு
      • வேலாயுதம் விமர்சனம் : நக்கீரன்
      • பரிதி இளம்வழுதி ராஜினாமா ஏற்பு: தி.மு.க. துணைப்பொத...
      • அதிமுகவினர் இடையே மோதல்: எம்.ஜி.ஆர். சிலை உடைப்பு
      • தோல்வியடைந்தும் மக்களுக்கு ஸ்வீட் கொடுத்த திமுக வே...
      • ஆட மறுத்த மனைவியின் மூக்கு, உதடுகளை அறுத்த கணவர் (...
      • 7 ஆம் அறிவு படத்திற்கு இலங்கையில் தடை?
      • 7 ஆம் அறிவை பார்த்து ரசித்தார் ரஜினி
      • பாமகவுடன் கூட்டணிக்கு தேமுதிக முயற்சி: விருத்தாசலத...
      • ரா (1) ஒன்னில் ரஜினி வீடியோ
      • மின் தடை நேரம் அதிகரிக்க திட்டம்
      • நம்புங்கள், இது அரசு ஆரம்பப் பள்ளி!
      • நிர்வானமாகவும் நடிப்பேன்"-பிரபல நடிகர் பரப்பரப்பு ...
      • பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி
      • மனமுடைந்து குமுறினார் சச்சின் : சேப்பல் பகீர்
      • ஏன் அப்படி செய்தார் சிம்பு?
      • சிறுத்தை சிவா இயக்கத்தில் அ‌ஜித்?
      • பம்பரமாக சுற்றும் விஜய்!
      • உடல் ஆரோக்கியத்துடன் 150 வயது வரை வாழஒரு மாத்திரை ...
      • இளம்பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த போலீசுக...
      • ஈரோடு மேயருக்கு செங்கோலால் வந்த சிக்கல்!
      • கலக்க வரும் வடிவேலு
      • விஜய்யின் வேலாயுதம் திரைப்படம் இன்டர்நெட்டில் வெளி...
      • ஜெயலலிதா முன்னிலையில் சைதை துரைசாமி பதவி ஏற்றார்
      • வெற்றி சான்றிதழை திரும்ப பெற்றனர்: 98 வயது மூதாட்ட...
      • கடாபியின் உடல் அழுகியது-கியூவில் நின்று ரசித்த மக்...
      • வெற்றி மாறன் படத்தில் சிம்பு - அமலா - ஆன்ட்ரியா!
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.