விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Monday, December 26, 2011

    பழவேற்காடு படகு விபத்து- 22 பேரின் பரிதாபக் கதை!


    அபாயகரமான பழவேற்காடு ஏரியில், 5-6 பேருக்கு மேல் போகக் கூடாத, சாதாரண மீ்ன்பிடி படகில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் சென்றதால்தான் விபத்து நேரிட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். 25 பேரை அந்தப் படகில் ஏற்றிச் சென்றதால்தான் படகு கவிழ்ந்து 22 பேரின் உயிரைக் குடித்து விட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    சென்னை அருகே உள்ளது புலிகாட் லேக் எனப்படும் பழவேற்காடு ஏரி. அக்கம் பக்கத்தினருக்கும், சென்னை மக்களுக்கும் இது ஒரு சுற்றுலாத்தலம் என்பதால் அடிக்கடி பலர் இங்கு வருவது வழக்கம். மீனவர்களின் மீ்ன்பிடி படகில் உயிரைப் பணயம் வைத்து படகு சவாரி செய்வதும் நடந்து வருகிறது.

    இந்தப் படகு சவாரி அபாயகரமானது என்பதை யாரும் உணர்வதில்லை. காரணம், சாதாரண மீன்பிடி படகான இதில் அதிகபட்சம் 5 பேருக்கு மேல் போவது கூடாது. ஆனால் பணத்திற்காக மீனவர்கள் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிக் கொண்டு செல்வது தொடர் கதையாக உள்ளது.

    அப்படித்தான் நேற்று கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் நாடார் என்பவர் தனது குடும்பத்தினரோடு போய் மொத்தமாக உயிரைப் பறி கொடுத்துள்ளார்.

    புதுக்கும்முடிப்பூண்டியை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன் (64). இவரது பூர்வீகம் தூத்துக்குடி மாவட்டமாகும். இவர் தனது மனைவி, மகன்கள்,மகள்கள், பேரப்பிள்ளைகளுடன் பழவேற்காடு பகுதிக்கு சுற்றுலா சென்றார். பல இடங்களை சுற்றிப்பார்த்த அவர்கள் மதியம் 2 மணி அளவில் பழவேற்காடு ஏரிக்கு வந்தனர்.

    சுந்தரபாண்டியன் குடும்பத்தினர் 23 பேர் ஒரு மோட்டார் படகில் ஏறினர். அந்த படகு அப்பகுதியில் மீன்பிடிக்கும் படகு. அந்தப் படகை ஓட்டியவர் அன்சாரி. படகில் அன்சாரியின் மனைவியான 26 வயதான நசீரா பானுவும் பயணித்தார்.

    ஏரி, கடல் தொடங்கும் இடமான முகத்துவாரம் வரை வந்தபோது சிலர் கடலுக்குள் போய் வரலாம் என்று வற்புறுத்தியுள்ளனர். ஆனால் அது அபாயகரமானது என்று அன்சாரி கூறியுள்ளார். இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் படகில் இருந்தவர்கள் கடலுக்குள் போகலாம் என்று வலியுறுத்தியதால் அன்சாரி படகை கடலுக்குள் திருப்பினார்.

    கடல் வழக்கத்தை விட சீற்றமாக காணப்பட்டது. அலைகளும் பெரிதாக இருந்தன. இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் அன்சாரி படகை கடலுக்குள் விட்டார். அப்போது பெரிதாக வீசிய அலையில் படகு அப்படியே கடலுக்குள் தள்ளப்பட்டது.

    படகு கவிழ்ந்ததையும் அதில் இருந்தவர்கள் தண்ணீரில் விழுந்ததையும் கரையில் இருந்த மீனவர்கள் சிலர் பார்த்து தஙக்ளது படகுகளுடன் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் படகில் இருந்தவர்கள் பெரும்பாலானோர் மூழ்கி விட்டனர். மூன்று சிறுவர்கள் மட்டும் கயிற்றைப் பிடித்து படகை இறுக்கப் பிடித்து உயிர் தப்பித் தத்தளித்தனர். அவர்களை முதலில் மீனவர்கள் மீட்டனர். ஆனால் மற்ற 22 பேரையும் மீட்க முடியவில்லை.

    போலீஸாருக்குத் தகவல் சென்று அவர்கள் தீயணைப்பு வீரர்கள், நீச்சல் வீரர்களுடன் விரைந்து வந்தனர்.அனைவரும் சேர்ந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர். படகோட்டி அன்சாரி உயிர்தப்பி விட்டார். அவரைப் போலீஸார் கைது செய்தனர். ஆனால் அவரது மனைவி நசீரா பானு பரிதாபமாக உயிரிழந்தார். இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் கல்யாணம் ஆனதாம். புதுப் பெண் என்பதால் நசீராவையும் படகுப் பயணத்திற்கு அழைத்து வந்திதருந்தார் அன்சாரி.

    இந்த விபத்தில்,

    சுந்தரபாண்டியன், மனைவி ஜெயஜோதி (60), மகன் ஜெயதுரை (45), மருமகள் சுந்தரமேரி (42), பேத்தி ரோஸ்லின் மேரி (13), மகன் ஆசீர்வாதம் (38), மருமகள் ஜனனி (31), பேத்தி மெர்லின் (12), பேரன் சார்லி (6), மகன் கனகராஜ் (35), மருமகள் 13. பியூலா (28), பேரன்கள் ஜோஸ்வா (4), இம்மானுவேல் (1), மகன் தங்கராஜ் (33), மருமகள் வசந்தா (24), பேத்தி ஜுலியட் ( 6 மாதம்), மகள் பாக்கியமணி (40), மருமகன் டேனியல் (45), பேரப்பிள்ளைகள் கோயில்ராஜ் (16), மனோஜ் (12), சுந்தரபாண்டியனின் கடையில் வேலை பார்க்கும் அனிதா (20), நசீரா பானு ஆகியோர் உயிரிழந்தனர்.

    இந்த விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக பால் தினகரன், ஜனகராஜ் சாமுவேல், பவுல் ராஜ் ஆகியோர் மட்டும் உயிர் பிழைத்தனர். மூன்று பேரும் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்து குறித்து பாலன் தினகரன் கூறுகையில், படகு கவிழ்ந்ததும் நாங்கள் அனைவரும் தூக்கி வீசப்பட்டோம். உடனடியாக நானும் எனது சகோதரன் ஜனகராஜ் சாமுவேல் மற்றும் பவுல் ராஜ் ஆகியோர் படகில் தொங்கி கொண்டிருந்த கயிற்றினை பிடித்து படகின் மேல் ஏறினோம். மீட்பு பணிக்காக படகில் வந்தவர்கள் எங்களை மீட்டனர். படகில் கவிழ்ந்ததால் அனைவரும் மாட்டி கொண்டார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை என்று அழுதபடி கூறினான்.

    மொத்தக் குடும்பமே நீரில் மூழ்கி பலியாகி விட்ட துயரச் செய்தியை அந்த சிறுவர்களுக்கு இன்னும் உறவினர்கள் தெரிவிக்கவில்லை.

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சுற்றுலா வந்து மொத்தக் குடும்பமே பலியான சோகம் அப்பகுதி மக்களை பெரும் வருத்தத்தி்ல ஆழ்த்தியது.


    Posted by விழியே பேசு... at 10:55 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ▼  December (434)
      • 2011ல் இந்தியா ( முக்கிய நிகழ்வுகள் பாகம் - 1 )
      • இளங்கோவனின் சொந்த ஊரில் முற்றுகை போராட்டம்
      • சசிகலா மீது ஏன் ஜெயலலிதா விசாரணைக் கமிசன் வைக்க வ...
      • புதுச்சேரியில் கரையை கடந்த புயல் சேலம் நோக்கி நகரு...
      • இந்திப் படத்துக்கு இசை அமைக்கிறாரா அனிருத்?
      • 2011-ம் ஆண்டில் நம்பர் ஒன் நா முத்துக்குமார்!
      • விஜயகாந்துக்கே புரிந்து விட்டது என்றால்.. சுப.வீ. ...
      • கடப்பா தர்காவில் சினேகா, பிரசன்னா பிரார்த்தனை
      • சிறுவயதில் படித்த பள்ளியை புதுப்பிக்க ரஜினிகாந்த் ...
      • விஜயகாந்தின் நன்றி கெட்டதனம்
      • 'தானே' தானாக வந்ததல்ல...!!
      • 2011- தமிழ் சினிமாவின் சூப்பர் வெற்றிகள்...
      • தானேயின் கோரத்தாண்டவம் ....!!!
      • தானே புயல் சிறப்பு அப்டேட்ஸ் (இந்தப் பக்கத்தை அவ்வ...
      • மணிரத்னம் படத்தில் பசுபதி!
      • அஞ்சலியின் தாராள மனசு!
      • விஷ்ணுவர்த்தனுடன் யுவன் மோதலா?
      • தனுஷ் இல்லை.. கார்த்தி !
      • ஜெனிலியா, நயன்தாராதான் எனக்கு பொருத்தமான ஜோடி! - த...
      • பிரதியுஷா தற்கொலை வழக்கில் காதலருக்கு தண்டனை குறைப...
      • பவர் ஸ்டார் VS (ரஜினி + விஜய்+ ETC..)
      • பத்திரிக்கையாளர்களிடம் நடுவிரலைக் காட்டிய சோனம் கப...
      • 4 ஆண்களை ஏமாற்றி திருமணம்: போலீஸ் உதவியுடன் தப்பிய...
      • ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்தியா படுதோல்வி
      • ரஜினியை விட காங்கிரசாரிடம் தான் அதிக கறுப்பு பணம் ...
      • ரூ.100 கோடிக்கு வீட்டை இன்சூரன்ஸ் செய்த சச்சின்
      • இயக்குநர் சரணை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!!
      • ஜப்பானில் பிரபலமான கொலை வெறி பாடல் இந்தியிலும் ரீம...
      • மருமகன் தனுஷுக்கு மாமனார் ரஜினி சொன்ன அட்வைஸ்!!
      • தானே புயல்: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
      • ஈவிகேஎஸ் இளங்கோவன் உருவப் பொம்மை எரித்த ரஜினி ரசிக...
      • தமிழ்நாட்டை `தானே' புயல் தாக்குமா?
      • காதலனுடன் புத்தாண்டு கொண்டாடும் ஹீரோயின்கள்!
      • என்னை வயதானவள் என்பதா? த்ரிஷா கோபம்!!
      • 96 மொழிகளில் ' காதல்' : சிம்புவின் Love Anthem (வீ...
      • "ஏழாம்அறிவு" கதையை திருடி தந்தவருக்கு முருகதாஸ் கா...
      • பாடகர்களான பரோட்டா சூரியும், பாண்டியும்...!
      • ஒபாமா வாயில் விரலைவிட்டு ஆட்டிய குழந்தை
      • நண்பனோடு மோத தயங்கிய 3 !துணிந்து மோதும் வேட்டை!!
      • 'துப்பாக்கி'யில் இதுவரை பார்த்திராத புதிய கெட்டப்ப...
      • "ஒய் திஸ் கொலவெறி"...மாஸ்டர் யாரு?!
      • மக்கள் ஆதரவில்லை: சிறை நிரப்பும் போராட்டம் ரத்து- ...
      • வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளோர் பட்டியலில் நடிகர்...
      • சசிகலா ஆதரவு அதிமுக அமைச்சர்கள் வீடுகள், அலுவலங்கள...
      • கறுப்புப் பணத்தில் கட்டப்பட்டது ரஜினியின் ராகவேந்த...
      • பிரதமருடன் விருந்து; ரத்தன் டாட்டாவுடன் விருந்து ...
      • சூர்யாவிடம் 3-ஆம் இடத்தை படிகொடுத்த விஜய்
      • ரகுமான் இசையில் பாடுகிறார் தனுஷ்!
      • ராகுல் காந்திக்கு கிடைத்த படுதோல்வி!
      • மெல்போர்ன் டெஸ்ட்; இந்தியா 282 ரன்னில் ஆல் அவுட்:...
      • 2வது இன்னிங்சை தொடங்கிய நயன்!
      • ஆரண்ய காண்டம் ! : ரசிக்கும் அனுராக்
      • விஜய் சொன்ன அஸ்க் லஸ்கா... மதன் கார்க்கி
      • ஷங்கரின் அடுத்த படம் ரெடி!
      • தனுஷ் அளித்த பரிசை வாழ்க்கையில் மறக்க முடியாது : த...
      • காசு கொடுத்தா தருகிறேன் : நடிகை கொடுத்த ஷாக்!
      • இயக்குனரால் பாதிக்கப்பட்ட இருவர்! கோவாவில் கொண்டாட...
      • நத்தம் விஸ்வநாதனை முதல்வராக்க முயன்றதா சசிகலா குரூப்?
      • நாயை பராமரிக்க கணவர் வேண்டும் :ஷெரீன்!
      • 'ஜனாதிபதி' மன்மோகன் சிங்- லோக்சபாவுக்கு இடைத் தேர்...
      • சிங்கப்பூரில் அஜீத் புத்தாண்டு கொண்டாட்டம்
      • ஜெ.வுடன் சமரசத்திற்கு - நாயுடு உதவியை நாடினார் சசி...
      • பிரதமர் விருந்தில் தனுஷ்: எல்லாம் கொலைவெறி தந்தது
      • போலீஸ் கமிஷனரிடம் நடிகர் சித்தார்த் மீது கொலை மிரட...
      • உ.பி தேர்தல்; கூகுள் இணையத்தளத்துடன் ராகுல்காந்தி ...
      • ஊழல் என்பது ஒரு உயிர்க்கொல்லி நோய் :அன்னாவுக்கு ஆத...
      • பொங்கல் போட்டி வெல்ல போவது யார் ?: நண்பன் vs வேட்ட...
      • தேசிய கீதத்திற்கு இன்று வயது 100
      • நிர்வாணமாக நடித்த முன்னணி நடிகை!
      • தமிழ் உணர்வாளர்களை கிண்டல் பண்ணும் சங்கீதா- கிரிஷ்...
      • 'மக்கள் பணத்தைச் சாப்பிடும் திரைத் துறையினர் ஏன் க...
      • மண்டபம் கொடுத்தார் ரஜினி- உண்ணாவிரதம் இருப்பாரா?
      • நண்பன் : குளோஸ் அப் ! நண்பன் சில தகவல்கள் !!
      • சீயான் வீட்டில் என்ன பிரச்னையோ!
      • புலியைப் பார்த்து பூனை போட்ட சூடு! சிம்புவுக்கு ர...
      • இசை நிகழ்ச்சியை தவிர்க்க முயற்சிக்கிறேன்!- இசைஞானி...
      • புதுமையான போராட்டம் நடத்துவேன்: விஜயகாந்த் பேட்டி
      • ஐயப்பனுக்கு வந்த சோகம்
      • வைகோ, பாரதிராஜா, தங்கர்பச்சான், கவிஞர் தாமரை உள்ளி...
      • மம்தாவுக்கு கொடுத்த மாதிரி எங்களுக்கும் கொடுங்கள்:...
      • ஜெயலலிதாவை கிண்டல் பண்ணும் விக்ரம் :அதிமுக வினர் க...
      • மத்திய அரசின் சூப்பர் திட்டம்: பள்ளி மாணவர்களுக்கு...
      • தமிழகத்தின் தயவின்றி கேரளா வாழவே முடியாது! - வைகோ
      • இரண்டாம் உலகம்: முதல்முறையாக ஹாரிஸ் ஜெயராஜ்!
      • டேம் 999 சர்ச்சை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்
      • ஜீவா கவுண்டவுன் ஸ்டார்ட்
      • விஜயகாந்த் கைதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் சாலை...
      • ஒரே படத்தில் 50 வேடங்களில் விக்ரம்
      • பழவேற்காடு படகு விபத்து- 22 பேரின் பரிதாபக் கதை!
      • விஜயகாந்த் கைது!
      • பிரதமருடன் ஜெ., அழகிரி, தயாநிதிமாறன் ( படங்கள் )
      • ஜனவரி 2 முதல் கோச்சடையான் ஷூட்டிங்
      • ரஜினியுடன் நடிக்க அசின் மறுத்தாரா?
      • சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரியில் படகு விபத்து: 2...
      • டெண்டுல்கர் மகனின் பேட்டிங், பவுலிங் திறமை-டீன் ஜோ...
      • பாரதிராஜாவின் இயக்கம் நிறுத்தம்
      • சசிகலா நீக்கத்துக்கு காரணம் என்ன?: சோ பரபரப்பு பேட்டி
      • இளையராஜா வீடு முன்பு பெரியார் தி.கவினர் ஆர்ப்பாட்டம்
      • மீண்டு வரணும், மீண்டும் வரணும் : பி.சி.ஸ்ரீராம்க்க...
      • 5 மாநில சட்டசபை தேர்தல் அறிவிப்பு – உ.பி.யில் 7 கட...
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.