விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Saturday, December 31, 2011

    2011ல் இந்தியா ( முக்கிய நிகழ்வுகள் பாகம் - 1 )

    ஜனவரி

    1- தபால் நிலையங்கள் மூலம் பிறப்பு இறப்பு சான்றிதழ், ஓய்வூதியம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபல் அறிவித்தார்.

    - உல்பா அமைப்பின் தலைவரான அரவிந்த ராஜ்கோவா விடுதலை செய்யப்பட்டார்.

    - நித்தியானந்தாவை அவரது ஆசிரமத்தில் சந்தித்து தனித் தனியாக சந்தித்து ஆசி பெற்றனர் நடிகைகள் ஜூஹி சாவ்லா, ரஞ்சிதா, டிவி நடிகை மாளவிகா ஆகியோர்.

    2 - சிறுமியைக் கற்பழித்து அவர் மீது பொய் வழக்கு போட்ட உ.பி., பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. நரேஷ் திவிவேதி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

    - நாடாளுமன்ற பொதுக் கணக்குக் கமிட்டி முன்பு பிரதமர் மன்மோகன்சிங் ஆஜராகக் கூடாது. இதுதொடர்பாக அவர் எங்களிடம் ஆலோசனை கேட்கவில்லை என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.

    - சிவில் உரிமை ஆர்வலர் பினாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்து ஒரு வார கால எதிர்ப்பு வாரத்தை சட்டிஸ்கரில் மாவோயிஸ்டுகள் தொடங்கினர்.

    - இங்கிலாந்தின் டெய்லி டெலிகிராப் நடத்திய உலகின் 10 ஈகோ படைத்த விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் யுவராஜ் சிங் இடம் பிடித்தார்.

    3 - சிட்டி வங்கி மேலாளர் சிவராஜ் பூரி வாடிக்கையாளர்களை மோசடியாக ஏமாற்றி ரூ. 400 கோடி அளவுக்கு சுருட்டிய மிகப் பெரிய ஊழல் வழக்கில் ஹீரோ குழும தலைமை நிதி அதிகாரி சஞ்சய் குப்தா கைது செய்யப்பட்டார்.

    - ஆருஷி கொலை வழக்கை மறு விசாரணைக்கு விட காஸியாபாத் சிபிஐ கோர்ட் மறுத்தது.

    - உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கேஜி பாலகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு புகார் குறித்து விசாரணை நடத்த கேரள முதல்வர் அச்சுதானந்தன் உத்தரவிட்டார்.

    6 - குவாத்ரோச்சிக்கு எதிரான போபர்ஸ் வழக்கை கைவிடுவது என்ற முடிவில் மாற்றமில்லை என்று சிபிஐ கோர்ட்டில் சிபிஐ தெரிவித்தது.

    14 - சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரஜோதி தரிசனத்தைக் கண்டு விட்டு திரும்பிய ஐயப்ப பக்தர்கள் புல்மேடு என்ற இடத்தில் ஏற்பட்ட பெரும் நெரிசலில் சிக்கினர். இதில் தமிழக பக்தர்கள் உள்பட 106 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    20 - புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

    21 - கர்நாடக முதல்வர் எதியூரப்பா மீது வழக்கு தொடர மாநில ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் அனுமதி வழங்கி பரபரப்பை ஏற்படுத்தினார்.

    24 - ஊழல் புகாரில் சிக்கிய காமன்வெல்த் போட்டி அமைப்புக் குழுவின் தலைவர் சுரேஷ் கல்மாடி அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.

    25 - காமன்வெல்த் ஊழல் வழக்கில் சுரேஷ் கல்மாடி கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

    27 - கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் புதுப்பிக்கும் பணிகள் முடிவடையாததால் அங்கு நடைபெறுவதாக இருந்த உலகக்கோப்பைப் போட்டி ரத்து செய்யப்படுவதாக ஐசிசி அறிவித்தது.

    - தூத்துக்குடி துறைமுகத்திற்கு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பெயரை சூட்ட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

    31 - எகிப்தில் வெடித்த கலவரத்தைத் தொடர்ந்து அங்கு சிக்கியிருந்த 300 இந்தியர்கள் விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர்.

    - 2 ஜி முறைகேடு குறித்த தனது விசாரணை அறிக்கையை நீதிபதி சிவராஜ் பாட்டீல் மத்திய அரசிடம் ஒப்படைத்தார்.

    - 2ஜி விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவிடம் 3 வது முறையாக 9 மணி நேரம் சிபிஐ விசாரணை நடத்தியது.

    - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் தொகுதிப் பங்கீடு குறித்து கருணாநிதி பேசினார். பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்துப் பேசினார்.

    - சபரிமலையில் மகரஜோதியானது மனிதர்களால்தான் ஏற்றப்படுகிறது என்று திருவாங்கூர் தேவஸ்தானம் அறிவித்தது.

    பிப்ரவரி

    1 - ரஞ்சிதாவுடன் படுக்கை அறையில் இருப்பது போன்ற வீடியோவை வெளியிடாமல் இருக்க ரூ. 100 கோடி தர வேண்டும் என்னிடம் பேரம் பேசப்பட்டதாக நித்தியானந்தா கூறினார்.

    2 - முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, 2ஜி ஊழல் வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.

    6 - தனது பிரஜா ராஜ்ஜியம் கட்சியை காங்கிரஸுடன் இணைப்பதாக டெல்லியில் நடிகர் சிரஞ்சீவி அறிவித்தார்.

    7- இஸ்ரோ நிறுவனம், தேவாஸ் நிறுவனத்திற்கு எஸ் பாண்ட் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளை வழங்கியதில் ரூ. 2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக சிஏஜி பரபரப்புக் குற்றச்சாட்டை சுமத்தியது.

    - அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் என்ற புதிய கட்சியை ரங்கசாமி தொடங்கினார்.

    9 - 2ஜி ஊழல் வழக்கில் ஸ்வான் நிறுவன அதிபர் சாஹித் உஸ்மான் பல்வா கைது செய்யப்பட்டார்.

    - இந்தியாவில் மக்கள் தொகைக் கணக்கெடுடுக்கும் பணி தொடங்கியது.

    10 - குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை இழிவாகப் பேசிய குற்றச்சாட்டைத் தொடர்ந்து ராஜஸ்தான் அமைச்சர் அமீன் கான் பதவி விலகினார்.

    13 - 2ஜி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது.

    14 - கர்நாடக பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, 5 சுயேச்சை எம்.எல்.ஏக்கள் திரும்பப் பெற்றுக் கொண்டதைத் தொடர்ந்து அவர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது சரியே என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    15 - முன்னாள் அமைச்சர் ராசா மீது மேலும் 2 வழக்குகளை சிபிஐ பதிவு செய்தது.

    17 - சிபிஐ விசாரணைக்குப் பின்னர் சிபிஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ராசா, திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

    21 - தமிழகத்தில் மேல்சபையை அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்தது.

    - மும்பை தீவிரவாதத் தாக்குதல் வழக்கில் பாகிஸ்தான் தீவிரவாதி கசாப்புக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

    22 - குஜராத் மாநிலம் கோத்ராவில் ரயில் எரிக்கப்பட்டு பல அயோத்தி பக்தர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் 31 பேர் குற்றவாளிகள் என குஜராத் மாநில சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்தது.

    28 - 2ஜி ஊழல் விவகாரம் தொடர்பான முக்கிய ஆவணங்களைக் காணவில்லை என்று சிபிஐ தெரிவித்தது.

    மார்ச்

    1 - குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில், 11 பேருக்கு விரைவு நீதிமன்றம் மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது.

    3 - ஊழல் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே.தாமஸ் நியமனத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

    4 - இத்தாலிய தொழிலதிபர் குவாத்ரோச்சி மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக சிபிஐ அளித்த அறிக்கையை டெல்லி கோர்ட் ஏற்று வழக்கை வாபஸ் பெற அனுமதித்தது.

    - முன்னாள் மத்திய அமைச்சர் அர்ஜூன் சிங் மரணமடைந்தார்.

    7 - மருத்துவக் கல்லூரிகளில் நுழைவுத் தேர்வு நடத்த உச்சநீதிமன்றம், இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு அனுமதி அளித்தது.

    - ஊழல் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே.தாமஸ் நியமனம் தொடர்பாக நடந்த தவறுகளுக்கு தான் பொறுப்பேற்பதாக பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார்.

    - வெளிநாட்டு வங்கிகளில் ரூ. 40,000 கோடி கருப்புப் பணத்தைப் பதுக்கிய தொழிலதிபர் ஹசன் அலி பிடிபட்டார்.

    10 - அரசியல் நடவடிக்கைகளிலிருந்து தான் ஓய்வு பெறுவதாக தலாய் லாமா அறிவித்தார்.

    11- எம்.பிக்களுக்கான நாடாளுமன்ற தொகுதி நிதி ரூ. 5 கோடியாக அதிகரிப்படுவதாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவித்தார்.

    14 - இந்திய அணு உலைகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டார்.

    22 - ஜூன் 30ம் தேதி முதல் 25 பைசா நாணயம் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.

    31 - இந்திய மக்கள் தொகை 121 கோடியை எட்டியது.

    ஏப்ரல்

    2 - மும்பையில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்று 2வது முறையாக உலகக் கோப்பையை வென்றது. இறுதிப் போட்டியில் இலங்கையை அது வீழ்த்தியது.

    - ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராசா உள்ளிட்டோர் மீது 80,000 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கையை சிபிஐ, சிறப்பு சிபிஐ கோர்ட்டில் தாக்கல் செய்தது.

    3 - ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக நீரா ராடியாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதேபோல ரத்தன் டாடாவும் விசாரிக்கப்பட்டார்.

    4 - இந்திய கிரிக்கெட் அணிக்கு வழங்கப்பட்ட உலகக் கோப்பை அசல் அல்ல, நகல் என்று சர்ச்சை கிளம்பியது. ஆனால் உண்மையான கோப்பைதான் வழங்கப்பட்டதாக ஐசிசி அறிவித்தது.

    5- டெல்லி ஜந்தர் மந்தரில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை அன்னா ஹஸாரே தொடங்கினார்.

    8 - ஐபிஎல் போட்டிகள் சென்னையில் கோலாகலமாக தொடங்கின. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸை வென்றது.

    9 - மத்திய அரசின் உத்தரவாதத்தை ஏற்று அன்னா ஹஸாரே தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார்.

    16 - கருப்புப் பண முதலை அசன் அலிக்கு போலி பாஸ்போர்ட் பெற்றுத் தந்த புகாரின் பேரில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் இக்பால் சிங்குக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியது.

    - லோக்பால் சட்டத்தை உருவாக்குவது பரிந்துரைக்க அமைக்கப்பட்ட உயர் நிலைக் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் நடந்தது.

    17 - அசன் அலிக்கு போலி பாஸ்போர்ட் பெற்றுத் தர உதவிய விவகாரத்தில் சிக்கிய புதுவை துணை நிலை ஆளுநர் இக்பால் சிங் பதவியை ராஜினாமா செய்தார்.

    18 - மேற்கு வங்க மாநில சட்டசபைக்கு நடந்த முதல் கட்ட பொதுத்தேர்தலில் 75 சதவீத வாக்குகள் பதிவாகின.

    19 - பேட்மிண்டன் வீராங்கனைகள் குட்டைப் பாவாடை அணிந்துதான் விளையாட வேண்டும் என்ற சர்வதேச பேட்மிண்டன் அமைப்பின் உத்தரவை சலசலப்பை ஏற்படுத்தியது.

    - அஸ்ஸாமில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா மற்றும் அவரது மகன் ரிஷி குமார் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

    20 - மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசு ராகிங்கில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஜான் டேவிட்டுக்கு விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. மேலும், இந்த தண்டனையை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்துக்கும் அது கடும் கண்டனம் தெரிவித்தது.

    21 - கருப்புப் பண விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. இத்தனை ஆண்டுகளாக தூங்கிக் கொண்டிருந்தீர்களா என்றும் அது காட்டமாக கேட்டது.

    24 - சத்ய சாய்பாபா உடல் நலக்குறைவு காரணமாக புட்டபர்த்தியில் உள்ள சத்யசாய் உயர் அறிவியல் மருத்துவ கழக மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது உடலுக்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

    25 - காமன்வெல்த் போட்டி ஊழல் வழக்கில் சுரேஷ் கல்மாடி பெரும் தாமதத்திற்குப் பின்னர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரை காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கினர்.

    - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிபிஐ 2வது குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. அதில் கனிமொழி, சரத்குமார் ரெட்டி உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

    26 - இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பதவியிலிருந்து சுரேஷ் கல்மாடி நீக்கப்பட்டார்.

    27 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் வரைவு அறிக்கை கசிந்தது. அதில் ராசா, பிரதமர் அலுவலகம் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

    - இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக டங்கன் பிளட்சர்
    நியமிக்கப்பட்டார்.

    - மறைந்த சாய்பாபாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் இன்று காலை புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    30 - அருணாச்சல் பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி காண்டு மரணமடைந்தார்.

    மே

    3 - சுரேஷ் கல்மாடியை திஹார் சிறையில் அடைக்க டெல்லி கோர்ட் உத்தரவிட்டது.

    6 - அருணாச்சல் பிரதேசத்தின் புதிய முதல்வராக காம்லின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    - தனக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட ரவீந்திரநாத் தாகூர் அமைதி விருதை ஏற்க மறுத்து விட்டார் அன்னா ஹஸாரே.

    9 - அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாகப் பிரித்து இந்துக்கள் மற்றும் முஸ்லீ்ம்களுக்கு வழங்க உத்தரவிட்ட அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

    11 - அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக கனிமொழி ஆஜரானார்.

    13 - மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலி்ல மமதா பானர்ஜி தலைமையிலான திரினமூல் காங்கிரஸுக்கு மாபெரும் வெற்றி கிடைத்தது. மமதா பானர்ஜி ஆட்சியைப் பிடித்தார். கேரளாவில் இடதுசாரி ஆட்சி அகற்றப்பட்டது, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடித்தது.

    - நாடு முழுவதும் என்டோசல்பானுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

    14 - கர்நாடகத்தில் 16 எம்.எல்.ஏக்களை சட்டசபை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது.

    15 - கர்நாடக பாஜக அரசை டிஸ்மிஸ் செய்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் சிபாரிசு செய்து கடிதம் அனுப்பினார்.

    16 - புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார். அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. அதிமுகவையும் கூட்டணியிலிருந்து அதிரடியாக கழற்றி விட்டார் ரங்கசாமி.

    17 - தனது கட்சியின் 114 எம்.எல்.ஏக்களுடன் குடியரசுத் தலைவரை சந்தித்த கர்நாடக முதல்வர் எதியூரப்பா, தனது மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்ற ஆளுநரின் அறிக்கையை டிஸ்மிஸ் செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.

    18 - அஸ்ஸாம் முதல்வராக தருண் கோகாய் பதவியேற்றார். கேரள முதல்வராக உம்மன் சாண்டி பதவியேற்றார்.

    20 - மேற்கு வங்க மாநில முதல்வராக முதல் முறையாக மமதா பானர்ஜி பதவியேற்றார். பதவியேற்பு விழாவுக்கு அவர் தொண்டர்களுடன் நடந்தே சென்றது அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தியது.

    23 - டெல்லி சென்ற திமுக தலைவர் கருணாநிதி திஹார் சிறையில் அடைக்கப்பட்ட தனது மகள் கனிமொழியை சந்தித்து கண்ணீர் மல்க ஆறுதல் கூறினார்.

    ஜூன்

    2 - கர்நாடக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எதியூரப்பா அரசு வெற்றி பெற்றது.

    3 - புதுச்சேரியில் ரங்கசாமி உள்ளிட்ட புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

    4 - தனது கோரிக்கைகள் அனைத்தையும் மத்திய அரசு ஏற்கும் வரை தனது உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என பாபா ராம்தேவ் அறிவித்தார்.

    5 - டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை டெல்லி போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர். ராம்தேவ் குண்டுக்கட்டாக தூக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டார். நாடு முழுவதும் இந்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    8 - கனிமொழிக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

    - பாபா ராம்தேவ் மீதான நடவடிக்கையைக் கண்டித்து டெல்லியில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார் அன்னா ஹஸாரே. ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றாவிட்டால் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கப் போவதாகவும் அவர் எச்சரித்தார்.

    10 - 7வது நாளாக தனது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்த பாபா ராம்தேவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    11 - தனது 9 நாள் உண்ணாவிரதத்தை பாபா ராம்தேவ் முடித்துக் கொண்டார்.

    12 - ஊழலுக்கு எதிரான எனது போராட்டத்திற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என்று சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில் அன்னா ஹசாரே கேட்டுக்கொண்டார்.

    20 - கனிமொழியின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    27 - உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலின் பாதாள அறைகள் திறந்து பார்க்கப்பட்டன. மொத்தம் உள்ள 6 அறைகளில் ஐந்து அறைகளில் குவியல் குவியலாக வைரம் வைடூரியம், தங்க வெள்ளி நகைகள் குவிந்து கிடந்தது. இவற்றின் மதிப்பு ஒன்றரை லட்சம் கோடி இருக்கலாம் என்று வெளியான தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


    2011ல் இந்தியா ( முக்கிய நிகழ்வுகள் பாகம் - 2 )



    Posted by விழியே பேசு... at 5:57 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ▼  December (434)
      • 2011ல் இந்தியா ( முக்கிய நிகழ்வுகள் பாகம் - 1 )
      • இளங்கோவனின் சொந்த ஊரில் முற்றுகை போராட்டம்
      • சசிகலா மீது ஏன் ஜெயலலிதா விசாரணைக் கமிசன் வைக்க வ...
      • புதுச்சேரியில் கரையை கடந்த புயல் சேலம் நோக்கி நகரு...
      • இந்திப் படத்துக்கு இசை அமைக்கிறாரா அனிருத்?
      • 2011-ம் ஆண்டில் நம்பர் ஒன் நா முத்துக்குமார்!
      • விஜயகாந்துக்கே புரிந்து விட்டது என்றால்.. சுப.வீ. ...
      • கடப்பா தர்காவில் சினேகா, பிரசன்னா பிரார்த்தனை
      • சிறுவயதில் படித்த பள்ளியை புதுப்பிக்க ரஜினிகாந்த் ...
      • விஜயகாந்தின் நன்றி கெட்டதனம்
      • 'தானே' தானாக வந்ததல்ல...!!
      • 2011- தமிழ் சினிமாவின் சூப்பர் வெற்றிகள்...
      • தானேயின் கோரத்தாண்டவம் ....!!!
      • தானே புயல் சிறப்பு அப்டேட்ஸ் (இந்தப் பக்கத்தை அவ்வ...
      • மணிரத்னம் படத்தில் பசுபதி!
      • அஞ்சலியின் தாராள மனசு!
      • விஷ்ணுவர்த்தனுடன் யுவன் மோதலா?
      • தனுஷ் இல்லை.. கார்த்தி !
      • ஜெனிலியா, நயன்தாராதான் எனக்கு பொருத்தமான ஜோடி! - த...
      • பிரதியுஷா தற்கொலை வழக்கில் காதலருக்கு தண்டனை குறைப...
      • பவர் ஸ்டார் VS (ரஜினி + விஜய்+ ETC..)
      • பத்திரிக்கையாளர்களிடம் நடுவிரலைக் காட்டிய சோனம் கப...
      • 4 ஆண்களை ஏமாற்றி திருமணம்: போலீஸ் உதவியுடன் தப்பிய...
      • ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்தியா படுதோல்வி
      • ரஜினியை விட காங்கிரசாரிடம் தான் அதிக கறுப்பு பணம் ...
      • ரூ.100 கோடிக்கு வீட்டை இன்சூரன்ஸ் செய்த சச்சின்
      • இயக்குநர் சரணை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!!
      • ஜப்பானில் பிரபலமான கொலை வெறி பாடல் இந்தியிலும் ரீம...
      • மருமகன் தனுஷுக்கு மாமனார் ரஜினி சொன்ன அட்வைஸ்!!
      • தானே புயல்: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
      • ஈவிகேஎஸ் இளங்கோவன் உருவப் பொம்மை எரித்த ரஜினி ரசிக...
      • தமிழ்நாட்டை `தானே' புயல் தாக்குமா?
      • காதலனுடன் புத்தாண்டு கொண்டாடும் ஹீரோயின்கள்!
      • என்னை வயதானவள் என்பதா? த்ரிஷா கோபம்!!
      • 96 மொழிகளில் ' காதல்' : சிம்புவின் Love Anthem (வீ...
      • "ஏழாம்அறிவு" கதையை திருடி தந்தவருக்கு முருகதாஸ் கா...
      • பாடகர்களான பரோட்டா சூரியும், பாண்டியும்...!
      • ஒபாமா வாயில் விரலைவிட்டு ஆட்டிய குழந்தை
      • நண்பனோடு மோத தயங்கிய 3 !துணிந்து மோதும் வேட்டை!!
      • 'துப்பாக்கி'யில் இதுவரை பார்த்திராத புதிய கெட்டப்ப...
      • "ஒய் திஸ் கொலவெறி"...மாஸ்டர் யாரு?!
      • மக்கள் ஆதரவில்லை: சிறை நிரப்பும் போராட்டம் ரத்து- ...
      • வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளோர் பட்டியலில் நடிகர்...
      • சசிகலா ஆதரவு அதிமுக அமைச்சர்கள் வீடுகள், அலுவலங்கள...
      • கறுப்புப் பணத்தில் கட்டப்பட்டது ரஜினியின் ராகவேந்த...
      • பிரதமருடன் விருந்து; ரத்தன் டாட்டாவுடன் விருந்து ...
      • சூர்யாவிடம் 3-ஆம் இடத்தை படிகொடுத்த விஜய்
      • ரகுமான் இசையில் பாடுகிறார் தனுஷ்!
      • ராகுல் காந்திக்கு கிடைத்த படுதோல்வி!
      • மெல்போர்ன் டெஸ்ட்; இந்தியா 282 ரன்னில் ஆல் அவுட்:...
      • 2வது இன்னிங்சை தொடங்கிய நயன்!
      • ஆரண்ய காண்டம் ! : ரசிக்கும் அனுராக்
      • விஜய் சொன்ன அஸ்க் லஸ்கா... மதன் கார்க்கி
      • ஷங்கரின் அடுத்த படம் ரெடி!
      • தனுஷ் அளித்த பரிசை வாழ்க்கையில் மறக்க முடியாது : த...
      • காசு கொடுத்தா தருகிறேன் : நடிகை கொடுத்த ஷாக்!
      • இயக்குனரால் பாதிக்கப்பட்ட இருவர்! கோவாவில் கொண்டாட...
      • நத்தம் விஸ்வநாதனை முதல்வராக்க முயன்றதா சசிகலா குரூப்?
      • நாயை பராமரிக்க கணவர் வேண்டும் :ஷெரீன்!
      • 'ஜனாதிபதி' மன்மோகன் சிங்- லோக்சபாவுக்கு இடைத் தேர்...
      • சிங்கப்பூரில் அஜீத் புத்தாண்டு கொண்டாட்டம்
      • ஜெ.வுடன் சமரசத்திற்கு - நாயுடு உதவியை நாடினார் சசி...
      • பிரதமர் விருந்தில் தனுஷ்: எல்லாம் கொலைவெறி தந்தது
      • போலீஸ் கமிஷனரிடம் நடிகர் சித்தார்த் மீது கொலை மிரட...
      • உ.பி தேர்தல்; கூகுள் இணையத்தளத்துடன் ராகுல்காந்தி ...
      • ஊழல் என்பது ஒரு உயிர்க்கொல்லி நோய் :அன்னாவுக்கு ஆத...
      • பொங்கல் போட்டி வெல்ல போவது யார் ?: நண்பன் vs வேட்ட...
      • தேசிய கீதத்திற்கு இன்று வயது 100
      • நிர்வாணமாக நடித்த முன்னணி நடிகை!
      • தமிழ் உணர்வாளர்களை கிண்டல் பண்ணும் சங்கீதா- கிரிஷ்...
      • 'மக்கள் பணத்தைச் சாப்பிடும் திரைத் துறையினர் ஏன் க...
      • மண்டபம் கொடுத்தார் ரஜினி- உண்ணாவிரதம் இருப்பாரா?
      • நண்பன் : குளோஸ் அப் ! நண்பன் சில தகவல்கள் !!
      • சீயான் வீட்டில் என்ன பிரச்னையோ!
      • புலியைப் பார்த்து பூனை போட்ட சூடு! சிம்புவுக்கு ர...
      • இசை நிகழ்ச்சியை தவிர்க்க முயற்சிக்கிறேன்!- இசைஞானி...
      • புதுமையான போராட்டம் நடத்துவேன்: விஜயகாந்த் பேட்டி
      • ஐயப்பனுக்கு வந்த சோகம்
      • வைகோ, பாரதிராஜா, தங்கர்பச்சான், கவிஞர் தாமரை உள்ளி...
      • மம்தாவுக்கு கொடுத்த மாதிரி எங்களுக்கும் கொடுங்கள்:...
      • ஜெயலலிதாவை கிண்டல் பண்ணும் விக்ரம் :அதிமுக வினர் க...
      • மத்திய அரசின் சூப்பர் திட்டம்: பள்ளி மாணவர்களுக்கு...
      • தமிழகத்தின் தயவின்றி கேரளா வாழவே முடியாது! - வைகோ
      • இரண்டாம் உலகம்: முதல்முறையாக ஹாரிஸ் ஜெயராஜ்!
      • டேம் 999 சர்ச்சை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்
      • ஜீவா கவுண்டவுன் ஸ்டார்ட்
      • விஜயகாந்த் கைதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் சாலை...
      • ஒரே படத்தில் 50 வேடங்களில் விக்ரம்
      • பழவேற்காடு படகு விபத்து- 22 பேரின் பரிதாபக் கதை!
      • விஜயகாந்த் கைது!
      • பிரதமருடன் ஜெ., அழகிரி, தயாநிதிமாறன் ( படங்கள் )
      • ஜனவரி 2 முதல் கோச்சடையான் ஷூட்டிங்
      • ரஜினியுடன் நடிக்க அசின் மறுத்தாரா?
      • சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரியில் படகு விபத்து: 2...
      • டெண்டுல்கர் மகனின் பேட்டிங், பவுலிங் திறமை-டீன் ஜோ...
      • பாரதிராஜாவின் இயக்கம் நிறுத்தம்
      • சசிகலா நீக்கத்துக்கு காரணம் என்ன?: சோ பரபரப்பு பேட்டி
      • இளையராஜா வீடு முன்பு பெரியார் தி.கவினர் ஆர்ப்பாட்டம்
      • மீண்டு வரணும், மீண்டும் வரணும் : பி.சி.ஸ்ரீராம்க்க...
      • 5 மாநில சட்டசபை தேர்தல் அறிவிப்பு – உ.பி.யில் 7 கட...
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.